புழல் சிறையில் தற்கொலைக்கு முயன்ற அபிராமி: காரணம் என்ன?

  • IndiaGlitz, [Monday,October 08 2018]

கள்ளக்காதலால் பெற்ற குழந்தைகளை கொலை செய்த குன்றத்தூரை சேர்ந்த அபிராபி புழல் சிறையில் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

குன்றத்தூரை சேர்ந்த அபிராமி என்ற பெண், அதே பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்தார். தங்களது கள்ளக்காதலுக்கு குழந்தைகள் இடைஞ்சலாக இருந்ததாக கருதிய அபிராமி, இரண்டு குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றி கழுத்தை நெறித்து கொலை செய்தார்.

பின்னர் கள்ளக்காதலனுடன் தப்பிக்க முயற்சி செய்த அபிராமியை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவரை ஜாமீனில் எடுக்க அவரது பெற்றோர்கள் கூட முன்வராததால் மனவிரக்தியுடன் அவர் சிறையில் இருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சிறையில் துப்பட்டா மூலம் அபிராமி தற்கொலைக்கு முயன்றதாகவும், கடைசி நேரத்தில் பணியில் இருந்த சிறை அதிகாரிகள் அபிராமியை காப்பாற்றியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. குழந்தைகளை கொன்ற குற்ற உணர்வு மற்றும் குடும்பத்தினர் ஒதுக்கியதால் ஏற்பட்ட மனவிரக்தி ஆகியவற்றால் அபிராமி தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

More News

4 மொழிகளில் வெளியாகும் ராம்கோபால் வர்மாவின் 'சாதீய காதல் கதை'

சமீபத்தில் வெளியான சாதிய காதல் கதை படமான 'பரியேறும் பெருமாள்' திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தென்னிந்திய திரையுலகம் மட்டுமின்றி பாலிவுட்டிலும்

விஜய் தந்தை எஸ்.ஏ.சி மீதான வழக்கு: சென்னை கோர்ட் அதிரடி உத்தரவு

நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்ஜாமின் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது

ஐஸ்வர்யா வெளியேறாதது வியப்பை அளித்தது: ரித்விகா

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளரான ரித்விகா சமீபத்தில் அளித்த பேட்டியில் ஐஸ்வர்யா வெளியேறுவார் என நாங்கள் அனைவரும் நினைத்தபோது திடீரென சென்றாயன் வெளியேறியது

'பேட்ட' படக்குழுவினர்களுக்கு 'குணமா' கோரிக்கை விடுத்த கார்த்திக் சுப்புராஜ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'பேட்ட' திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கோரிக்கையை தனது படக்குழுவினர்களுக்கு முன்வைத்துள்ளார்.

விஜய்சேதுபதி அணிக்கு கிடைத்த முதல் வெற்றி

ஒவ்வொரு ஆண்டும் புரோ கபடி போட்டிகள் நடந்து வருவது தெரிந்ததே. கடந்த ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன், தமிழ் தலைவாஸ் அணிக்கு விளம்பர தூதராக இருந்தார்