பார்த்திபன் இயக்கத்தில் அபிஷேக்பச்சன்: படப்பிடிப்பு ஆரம்பம்!

  • IndiaGlitz, [Thursday,August 12 2021]

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து, தயாரித்து, இயக்கிய திரைப்படம் ’ஒத்த செருப்பு’ என்பதும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஆஸ்கார் உள்பட பல்வேறு விருதுகளுக்கு இந்த படம் பரிந்துரை செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு மத்திய அரசின் இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் மேலும் சில மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘ஒத்த செருப்பு’ ஹிந்தி ரீமேக்கில் பார்த்திபன் வேடத்தில் அபிஷேக் பச்சன் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை பார்த்திபன் இயக்கிய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை அடுத்து படக்குழுவினர்களுக்கு திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழில் மாபெரும் வரவேற்பை பெற்ற ’ஒத்த செருப்பு’ திரைப்படம் ஹிந்தி ரசிகர்களின் வரவேற்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

More News

நீலகிரியில் ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பு? யானை உயிரிழப்பால் மருத்துவர்கள் அதிர்ச்சி!

நீலகிரி மாவட்டம் புலிகள் காப்பகம் அருகே உள்ள மசினகுடி பகுதியில் நேற்றுமுன்தினம் 4 வயதுள்ள ஆண் யானை ஒன்று ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளது.

சிறுத்தை சிவாவுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரஜினிகாந்த்: வைரல் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

ஜாக்கிரதை மக்களே! மீண்டும் உச்சம் தொடும் சென்னை!

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகம் முழுவதும் குறைந்து வந்தது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னை உள்ளிட்ட

தல அஜித்தின் வேற லெவல் வீடியோ: இணையதளத்தில் வைரல்!

தல அஜித்தின் வேற லெவல் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கள்ளக்காதலனுக்காக கணவனை கொன்ற மனைவி: 10 நாட்களுக்கு பின் என்ன செய்தார் தெரியுமா?

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்துவிட்டு தலைமறைவாகி இருந்த நிலையில் பத்து நாட்கள் கழித்து போலீசில் சரண் அடைந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது