close
Choose your channels

சினிமாவை விட்டு போனதற்கான உண்மையான காரணம் .... அபிராமி

Wednesday, April 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சினிமாவில் புகழ் பெற்ற கதாநாயகியாக வலம் வந்தவர் அபிராமி. புகழின் உச்சியில் இருக்கும் போதே அவர் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இவர் தற்போது தான் நடித்து வெளிவர இருக்கும் ஒரு கோடை மர்டர் மிஸ்ட்ரி என்ற வலை தொடர் பற்றியும் மற்றும் தன்னுடைய சினிமா வாழ்கை பற்றியும் நமக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

நடிகை அபிராமி அவர்களிடம் 10 வருட சினிமா இடைவெளிக்கான காரணம் என்ன என்று கேட்கப்பட்டது அதற்கு அவர் எனக்கு என்னோட வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க முடிந்தது. நான் என்னுடைய 15 வது வயதில் நடிக்க வந்தேன் பள்ளி படிப்பை கூட நான் சரியாக முடிக்கவில்லை 21 வது வயது வரை நான் தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டிருந்தேன் .நண்பர்களுடன் என்னால் நேரம் செலவழிக்க முடியவில்லை ஒரு சராசரி பெண்ணாக என்னால் வாழ முடியவில்லை.

அதனால் எனக்கு ஒரு இடைவேளை தேவைபட்டது அதை நான் மிகவும் யோசித்து தான் செய்தேன் ,அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. பின் ஒரு கோடை மர்டர் மிஸ்ட்ரி இந்த வலை தொடரில் நடித்த அனுபவம் உங்களுக்கு எப்படி இருந்தது என்ற கேள்வி கேட்கப்பட்டது .அதற்கு நடிகை அபிராமி இப்படத்தின் இயக்குனர் விஷால் வெங்கட் மிகவும் திறமையானவர் வலை தொடரினுடைய கதையில் அவர் மிகவும் தெளிவாக இருப்பார் .அவருடன் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது என்று அபிராமி கூறினார் .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.