சினிமாவை விட்டு போனதற்கான உண்மையான காரணம் .... அபிராமி

  • IndiaGlitz, [Wednesday,April 26 2023]

சினிமாவில் புகழ் பெற்ற கதாநாயகியாக வலம் வந்தவர் அபிராமி. புகழின் உச்சியில் இருக்கும் போதே அவர் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இவர் தற்போது தான் நடித்து வெளிவர இருக்கும் ஒரு கோடை மர்டர் மிஸ்ட்ரி என்ற வலை தொடர் பற்றியும் மற்றும் தன்னுடைய சினிமா வாழ்கை பற்றியும் நமக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

நடிகை அபிராமி அவர்களிடம் 10 வருட சினிமா இடைவெளிக்கான காரணம் என்ன என்று கேட்கப்பட்டது அதற்கு அவர் எனக்கு என்னோட வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க முடிந்தது. நான் என்னுடைய 15 வது வயதில் நடிக்க வந்தேன் பள்ளி படிப்பை கூட நான் சரியாக முடிக்கவில்லை 21 வது வயது வரை நான் தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டிருந்தேன் .நண்பர்களுடன் என்னால் நேரம் செலவழிக்க முடியவில்லை ஒரு சராசரி பெண்ணாக என்னால் வாழ முடியவில்லை.

அதனால் எனக்கு ஒரு இடைவேளை தேவைபட்டது அதை நான் மிகவும் யோசித்து தான் செய்தேன் ,அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. பின் ஒரு கோடை மர்டர் மிஸ்ட்ரி இந்த வலை தொடரில் நடித்த அனுபவம் உங்களுக்கு எப்படி இருந்தது என்ற கேள்வி கேட்கப்பட்டது .அதற்கு நடிகை அபிராமி இப்படத்தின் இயக்குனர் விஷால் வெங்கட் மிகவும் திறமையானவர் வலை தொடரினுடைய கதையில் அவர் மிகவும் தெளிவாக இருப்பார் .அவருடன் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது என்று அபிராமி கூறினார் .

More News

கமல்ஹாசன் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? 'PS 2' புரமோஷன் விழாவில் விக்ரம் விளக்கம்..!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் வெள்ளி என்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு

திவ்யா துரைசாமியின் அடுத்த சம்பவம்.. ரம்யா பாண்டியன் ஸ்டைலில் போட்டோஷூட்..!

நடிகை ரம்யா பாண்டியன் ஒரே ஒரு இடுப்பழகு போட்டோஷூட் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான நிலையில் அதே பாணியில் நடிகை திவ்யா துரைசாமியின் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஹிட் பாடலுக்கு செம ஆட்டம் போடும் 'இரவின் நிழல்' நடிகை.. வைரல் வீடியோ..!

பார்த்திபன் நடித்து இயக்கிய 'இரவின் நிழல்' என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நடிகை சூப்பர் ஹிட் பாடலுக்கு செம நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ள நிலையில் அந்த

திருமணமான சில ஆண்டுகளில் எடுத்த புகைப்படம்.. கணவர் குழந்தையுடன் க்யூட் ராதா..!

நடிகை ராதா திருமணமாகி ஒரு சில ஆண்டுகளில்  எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அதில் கணவர் குழந்தையுடன் அவர் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து

ரஜினி-சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்? ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.