பிக்பாஸ் ஆர்த்தியின் முதல் டுவீட்

  • IndiaGlitz, [Monday,July 17 2017]

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்தபடியே ஆர்த்தி வெளியேற்றப்பட்டார். மற்றவர்களை போலி போலி என்று கூறிக்கொண்டிருந்த ஆர்த்தி, உண்மையில் ஓவர் ஆக்டிங் செய்வதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களும், மிமிக்களும் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஆர்த்தி தற்போது முதன்முதலாக டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
'நான் மீண்டும் வந்துவிட்டேன். என்னை கேலி செய்வதில் இதுவரை பிசியாக இருந்தவர்கள் இனி ஓய்வு எடுக்கலாம். ஆனால் ரசிக்கும்படியான மிமிக்களை செய்திருந்தீர்கள். அனைவருக்கும் நன்றி. பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்தபோது எனது கேரக்டருக்கான உங்களது கருத்துக்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டேன். அனைவருக்கும் நன்றிகள்' என்று தெரிவித்துள்ளார்
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் கமல்ஹாசனிடம் தான் வெளியேறியது எதனால் என்ற கேள்விக்கு பதிலளித்த ஆர்த்தி, 'மக்களுக்கு உண்மையாக இருப்பவர்களைவிட நடிப்பவர்களைத்தான் அதிகம் பிடித்துள்ளது என்ற உண்மையை தெரிந்து கொண்டதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சசிகலாவின் சலுகைகளை கண்டுபிடித்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா திடீர் டிரான்ஸ்ஃபர்

சொத்துக்குவிப்பு வழக்கிற்காக சிறைதண்டனை பெற்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்காக சிறைத்துறை மேலதிகாரிகள் ரூ.2 கோடி வரை லஞ்சம் பெற்றிருப்பதாகவும் கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம் சுமத்தியிருந்தார்...

அஜித்துக்கு இருந்த தைரியம் கமலுக்கு ஏன் இல்லை? அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே ஆளும் அதிமுக அரசு மீது கடுமையான விமர்சனம் செய்து வருவதும், அதற்கு தமிழக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையும் இருந்து வருகிறது.

தைரியம் இருந்தால் கமல் அரசியலுக்கு வரட்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

சமீபத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, 'தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து வருவதாகவும், ஊழல் விஷயத்தில் பீகாரை தமிழகம் மிஞ்சிவிட்டதாகவும் கூறினார்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு கொடுத்த சிம்பு

சமீபத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இங்கிலாந்தில் 'நேற்று இன்று நாளை' என்ற இசை நிகழ்ச்சியை நடத்தியபோது தமிழில் மட்டுமே அதிக பாடல்கள் பாடியதாக கூறி வட இந்தியர்கள் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும்போதே வெளியேறியதாக சர்ச்சை எழுந்தது.

அபிராமி ராமநாதனுக்கு விஷால் நன்றி கடிதம்

அபிராமி திரையரங்க உரிமையாளரும், தமிழக திரையங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான அபிராமி ராமநாதன் நேற்று தனது திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்தால் அதற்கு தனியாக கட்டணம் இல்லை என்று அறிவித்தார்.