இவர்தான் டைட்டில் வின்னர்: தமிழ் திரைப்பட இசையமைப்பாளரின் பதிவு!

பிக்பாஸ் டைட்டில் வின்னராக ஆரி, பாலாஜி, ரியோ ஆகிய மூவருக்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக பார்வையாளர்கள் பலர் கணித்துள்ள நிலையில் இதுகுறித்து தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் ஆரி தான் டைட்டில் வின்னர் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

ஆரி டைட்டில் வின்னர். அது வேறு விஷயம். ஆனால், இவர் அனைவரின் பகைமையை தேடி கொண்டு அதை எப்படி சிறப்பாக சமாளிக்கின்றார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது!

ஒரு வீட்டில் அனைவரும் உங்களை வெறுத்து, குற்றம்சாட்டி, உங்களுக்கு எதிராக திட்டம் தீட்டி செயல்படும் நபர்கள் நடுவில் இருக்க நிச்சயம் நான் விரும்பமாட்டார்கள். அப்படி இருப்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. ஆனால் இதையெல்லாம் சமாளித்து ஆரி 75 நாட்களாக இருந்து வருகிறார் என்றால் உண்மையிலேயே ஆச்சரியம் தான்.

மேலும் ஆரி இன்னும் ஒவ்வொருவரின் தகுதிகள் குறித்து விவாதித்து வருகிறார். அப்போது அவரைச் சுற்றியுள்ளவர்கள் அவரை விமர்சனரீதியாக தாக்குதல் நடத்துகிறார்கள்.

வெளியுலகம் தெரியாமல் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு வீட்டில், வழக்கமான உலகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில், உணர்ச்சிகள் கொந்தளிக்கின்றன. ஈகோக்கள் பெருகுகின்றன. சுயமரியாதை போராட்டமும் அவ்வப்போது நடக்கின்றது. ஆனாலும் ஆரியின் எண்ணங்கள், திட்டங்கள், உத்திகளை பார்க்கும்போது, அவர் ஒரு இரும்பு மனிதனை போல் உள்ளார். சிலருக்கு இது சுலபமான ஒன்றாக தெரியலாம், ஆனால் நான் அவரை பார்த்து வியப்படைகிறேன். இவ்வாறு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.

More News

ரூ.220 கோடி சம்பாதிக்கும் 9 வயது சிறுவன்: யூடியூப் ஆச்சரியம்

ரஷ்யாவை சேர்ந்த 9 வயது சிறுவன் ரூபாய் 220 கோடி சம்பாதித்து உலகின் அதிக வருவாய் பெறும் யுடியூபர்களில் முதலிடம் பெற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

தாய்லாந்து மன்னர் காதலியின் ஆயிரக்கணக்கான ஆபாச படங்கள்: கசியவிட்டது ராணியா?

தாய்லாந்து மன்னர் காதலியின் ஆயிரக்கணக்கான ஆபாச புகைப்படங்கள் இங்கிலாந்து நாட்டின் பத்திரிகை ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸை ஓட வைத்த பிக்பாஸ்: தடுக்கி விழுந்த பாலா!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெற்று வரும் பால் & கேட்ச் டாஸ்க்கில் நேற்று சோம் அணியினர் அதிக பந்துகளை பிடித்து அதிக மதிப்பெண்களை பெற்று உள்ளனர். இந்த நிலையில் இன்றும் அந்த டாஸ்க் தொடர்கிறது

உலகத்தின் மீட்பர் ஏன் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்…. விளக்கம் அளிக்கும் ஆடியோ!!!

இயேசு கிறிஸ்துவின் வரலாற்றைக் கேட்ட எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். உலகத்தின் ரட்சகர் தன்னுடைய மகனை மாட்டுத் தொழுத்தில் பிறக்கச் செய்தார்.

பாலாவின் சிரிப்புக்கு பின் இருக்கும் சோக காதல் கதை: வைரலாகும் வீடியோ 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய பாலாஜி, தந்திரமாகவும் திறமையாகவும் விளையாடி வருவதாகவும் அவர் கண்டிப்பாக இறுதிப்போட்டியில் நுழையும் வாய்ப்பு உள்ளது