அருள்நிதியின் 'ஆறாது சினம்'. ஒரு முன்னோட்டம்

  • IndiaGlitz, [Thursday,February 25 2016]

கடந்த ஆண்டு அருள்நிதி நடித்த 'டிமாண்ட்டி காலனி' மற்றும் 'நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது மட்டுமின்றி புதுமாப்பிள்ளையாகவும் அவர் பதவியுயர்வு பெற்றார். இந்நிலையில் இந்த ஆண்டு அருள்நிதியின் நடிப்பில் வெளியாகவுள்ள முதல் திரைப்படமான 'ஆறாது சினம்' என்ற படம் நாளை வெளியாகவுள்ளது.

''ஆறுவது சினம்' என்றுதான் ஒளவையாரின் ஆத்திச்சூடியில் நாம் படித்திருக்கின்றோம். ஆனால் ''ஈரம்'' இயக்குனர் அறிவழகன் தேர்வு செய்த 'ஆறாது சினம்' என்ற டைட்டிலே படம் பார்க்க தூண்டும் வகையில் உள்ளது. 'ஈரம்', வல்லினம்' ஆகிய இரண்டு படங்களின் மூலம் தன்னுடைய திறமையை நிரூபித்த அறிவழகனின் மூன்றாவது படைப்புதான் இந்த ஆறாது சினம்


இந்த படத்தில் 'காக்கா முட்டை' நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார். அந்த படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக ஒரு சேரிப்பெண்ணாக நடித்திருந்த ஐஸ்வர்யா, இந்த படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக, நகரத்து பெண்ணாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் இன்னொரு நாயகியாக ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே 'தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், 'பாயும் புலி' ஆகிய படங்களில் நடித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.

டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏற்கனவே பல வெற்றிப்படங்களை தயாரித்து மற்றும் விநியோகம் செய்த அனுபவம் உள்ள பிரபல நிறுவனம் என்பதால் இந்த படத்தின் புரமோஷன்கள் பக்காவாக நடந்துள்ளன.


கமல்ஹாசனின் 'பாபநாசம்' படத்தை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் ஜீத்துஜோசப் இயக்கிய 'மெமோரீஸ்' படத்தின் தமிழ் ரீமேக் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தை போல தமிழிலும் இந்த படம் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

அதர்வாவின் 'கணிதன். ஒரு முன்னோட்டம்

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த முரளியின் திரையுலக வாரிசான அதர்வா, கடந்த 2010ஆம்...

'புலி'க்கு நஷ்ட ஈடு கொடுக்கும் 'போக்கிரி ராஜா'

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி நடிப்பில் சிம்புதேவன் இயக்கிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் 'புலி'...

என் மகனுக்கு விஜய்ன்னு ஏன் பேர் வைச்சேன் தெரியுமா? எஸ்.ஏ.சி

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் விஜய் என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்ட நிலையில் இன்று விஜய்யின் தந்தைதான் எஸ்.ஏ.சி என்று கூறும் அளவுக்கு விஜய்யின் புகழ் உலகமெங்கும் பரவியுள்ளது...

ஜீவாவின் 'போக்கிரி ராஜா' சென்சார் தகவல்கள்

கடந்த ஆண்டு ஜீவா நடித்த திரைப்படம் எதுவும் வெளியாகவில்லை எனினும் இந்த ஆண்டு அவர் நடித்த போக்கிரிராஜா, திருநாள்...

ஒரே நாளில் அதர்வாவுக்கு கிடைத்த இரட்டை மகிழ்ச்சி

அதர்வா முரளி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஈட்டி' நல்ல வெற்றியை பெற்ற நிலையில் அதர்வாவின் அடுத்த படமான 'கணிதன்'...