கமல்ஹாசனின் அடுத்த படம் ரிலீஸ் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Saturday,January 04 2020]

கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம்-2 என்ற ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே வெளிவந்து உள்ளதால் கமல் ரசிகர்கள் அவரது படங்கள் வெளியாக காத்திருக்கின்றனர். தற்போது தயாராகி வரும் இந்தியன் 2’ திரைப்படம் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கமலஹாசன் திரைப்படத்தின் ரிலீசுக்காக அவரது ரசிகர்கள் இன்னும் ஒரு ஆண்டுக்கும் மேல் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் தற்போது அவருடைய படம் விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கமலஹாசன் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ’ஆளவந்தான்’ திரைப்படம் தற்போது டிஜிட்டலில் ரீமாஸ்டர் செய்யப்பட்டு விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

மிக பிரமாண்டமாக உருவான இந்த படம் ரிலீஸானபோது வசூல் அளவில் படுதோல்வி அடைந்தது. ஆனாலும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்த படம் கலந்து கொண்டு பெரும் பாராட்டைப் பெற்றது. சமீபத்தில் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் ஆளவந்தான் படத்தை பார்த்து இன்ஸ்பிரேஷன் ஆகி தான் ஒரு சில காட்சிகளை தன்னுடைய படத்தில் வைத்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

மேலும் தொலைக்காட்சிகளில் இந்த படம் திரையிடப்படும்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இந்த படத்தை டிஜிட்டலில் உருவாக்கி விரைவில் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

கமலஹாசன் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் ரவீனா டாண்டன் மற்றும் மனிஷா கொய்ராலா நாயகிகளாக நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

உள்ளாட்சி பதவிகளில் வெற்றி வாகை சூடிய பெண்கள்

பெண்கள் கூட்டமாகப் பொது இடங்களில் பங்குகொள்ளும்போதும் பொதுப்பணிகளில் தங்களது கவனத்தைச் செலுத்தும்பொழுதும் பெரிய அளவிலான மாற்றங்களைக்கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை உலகளவில் பரவலாகக் காணப்படுகிறது

மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 மென்பொருளை முடக்கப்போவதாக அறிவிப்பு

கணினிக்கான மென்பொருள் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருள்களே பெரும்பாலான கணினிகளில் பொருத்தப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன

போதை ஆசாமியிடம் சிக்கிய கருநாகம்: கொத்தி, கொத்தி உயிரிழந்த பரிதாபம்

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள். ஆனால் போதை ஆசாமியிடம் சிக்கிய ஒரு பாம்பு அந்த நபரை கொத்தி, கொத்தி, கடைசியில் சோர்ந்துபோய் உயிரைவிட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது

பெயரை மாற்றியது ஏன்? மனம் திறந்த நயன்தாரா பட நாயகன்!

நயன்தாரா நடித்த 'மாயா' என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்த நடிகர் ஆரி சமீபத்தில் தனது பெயரை ஆரி அருஜூனா என்று மாற்றினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

பழம்பெரும் நடிகரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் பிரபல நடிகை!

பழம்பெரும் நடிகர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை அவரது மகளே தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது