மனைவியை அழவைக்க விரும்பாத ஆடுகளம் முருகதாஸ்

  • IndiaGlitz, [Friday,February 26 2016]

'வெற்றிமாறன்' இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'விசாரணை' திரைப்படம் தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த படம் பல சர்வதேச விருதுகளை குவித்து கோலிவுட்டுக்கு பெருமை சேர்த்த நிலையில் இந்த படத்தில் நடித்த அட்டக்கத்தி தினேஷ் உள்பட அனைவருக்கும் நல்ல பெயர் கிடைத்தது.


இந்நிலையில் இந்த படத்தில் நான்கு விசாரணைக்கைதிகளில் ஒருவராக நடித்தவர் ஆடுகளம் முருகதாஸ். இவருடைய நடிப்பு ஏற்கனவே பத்திரிகையாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட நிலையில் இந்த படத்திற்கு தனது மனைவியை அழைத்து செல்ல மறுத்துவிட்டாராம் ஆடுகளம் முருகதாஸ்.

திரையில் போலீஸார் தன்னை கொடுமையாக அடித்து துன்புறுத்துவதை தனது மனைவி பார்த்தால் தியேட்டரிலேயே அழுதுவிடுவார் என்பதால் அவரை இந்த படத்திற்கு அழைத்து செல்லவில்லை என சமீபத்தில் ஒரு பேட்டியில் ஆடுகளம் முருகதாஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'விசாரணை' வெற்றிக்கு பின்னர் ஆடுகளம் முருகதாஸூக்கு கோலிவுட்டில் நகைச்சுவை வேடங்கள் மட்டுமின்றி குணசித்திர வேடங்களில் நடிக்கவும் பல வாய்ப்புகள் தேடி வருவதாக கூறப்படுகிறது.