'ஆடுஜீவிதம்' ரிலீஸ் நேரத்தில் நிகழ்ந்த எதிர்பாராத மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

  • IndiaGlitz, [Monday,March 25 2024]

பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் மற்றும் அமலாபால் நடித்த ’ஆடு ஜீவிதம்’ என்ற திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் வீட்டில் நிகழ்ந்த மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள நஜிப் என்பவர் அரபு நாட்டுக்கு வேலைக்காக சென்ற நிலையில் அவர் அங்கு ஒட்டகம் மேய்க்கும் வேலையில் அமர்த்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் அதன் பின்னர் அவர் அங்கிருந்து மிகவும் கஷ்டப்பட்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு தப்பித்து கேரளாவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நஜிப் என்பவரின் கதையை கேள்விப்பட்ட கேரளா பிரபல எழுத்தாளர் ஒருவர் ’ஆடு ஜீவிதம்’ என்ற பெயரில் நாவலை எழுதியுள்ளார் என்பதும் மலையாளத்தில் மிக அதிகமாக விற்பனையான இந்த நாவல் திரைப்படம் தான் அதே பெயரில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உண்மை கதையை வைத்து தான் இயக்குனர் பிளஸ்ஸி என்பவர் ’ஆடு ஜீவிதம்’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த படம் வரும் 29ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது என்று குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நஜிப் அவர்களின் பேத்தி சுவாச கோளாறு காரணமாக உயிரிழந்து விட்டதாகவும் பிறந்து சில மாதங்களே ஆன இந்த குழந்தையின் மரணம் அவரது குடும்பத்தினரை நிலைகுலை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டும் இன்றி நஜிப் அவர்கள் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் போது தான் அவருக்கு மகன் பிறந்தான் என்பதும் தற்போது அவரது மகன் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் தான் அவருடைய மகளும் இறந்து உள்ளார் என்பது காலம் செய்த சோகமான ஒற்றுமையாக கருதப்படுகிறது.

More News

'குழந்தைகள் முன்னேற்ற கழகம்': செந்தில் உடன் சேர்ந்து யோகிபாபு ஆரம்பித்த அரசியல் கட்சி..!

நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பிப்பது என்பது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை புதிது இல்லை என்பதும் மக்கள் திலகம் எம்ஜிஆர் முதல் தளபதி விஜய் வரை பலர் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளனர் என்பது தெரிந்தது.

லோகேஷ் கனகராஜ் படம் இயக்குவதை விட்டுவிடலாம்.. என்ன ஒரு கெமிஸ்ட்ரி.. 'இனிமேல்' ஆல்பம்..!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் என்ற இடத்தை பிடித்துள்ள லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து நடித்த 'இனிமேல்' என்ற ஆல்பம் வெளியாகி உள்ள

தமிழகத்தின் ஸ்டார் தொகுதி: மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன் - வினோத் பி.செல்வம்..!

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தற்போது வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக

இப்படியெல்லாம் பேசினால் எப்படி பெண்கள் இந்த துறையில் சாதிப்பார்கள் ?

நான் வேறு ஒருவரின் பட்டத்தை ஒன்றும் பறிக்கவில்லை.என் திறமையை என்னால் முடிந்த வரை காட்டி தான் இந்த பட்டத்தைப் பெற்றேன்.இதற்காக பெருமை படுகிறேன்........

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: மீன ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!

பிரபல யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, ஆன்மீகக் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில் 2024 குரோதி வருடம் மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பற்றி கணித்துள்ளார்.