சூரிய கிரகணத்தின் போது எடுக்கப்பட்ட இணையத்தை கலக்கும் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Friday,December 27 2019]

ஐக்கிய அரபு அமீரகத்தின் பாலைவனத்தில் ஜோஷ்வா கிரிப்ஸ் என்ற புகைப்பட கலைஞர் சூரிய கிரகணத்தை பதிவு செய்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் உண்டாக காரணம். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும்.
டிசம்பர் 26ம் தேதி நிகழ்ந்த சூரிய கிரகணம் மிகவும் அரிதானது. மீண்டும் இதே போன்றதொரு சூரிய கிரகணம் 2031ம் ஆண்டு மே 16ம் தேதிதான் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த தருணத்தை தவறவிடக்கூடாது என்பதற்காக பெரும் சிரத்தை எடுத்துள்ளார் புகைப்பட கலைஞர் ஜோஷ்வா கிரிப்ஸ்.

தற்போது, அவர் எடுத்த இந்த புகைப்படம் வைரலாக பகிரப்பட்டு பாராட்டுகளையும் குவித்து வருகிறது. இந்த புகைப்படத்தை தான் எப்படி திட்டமிட்டு எடுத்தேன் என்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பிரிவில் பதிவு செய்துள்ளார்.

More News

கோவை 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை

கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு மரண தண்டனை விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

முடிவுக்கு வந்தது விஜய் ஆண்டனியின் அடுத்த படம்!

விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது அவர் அக்னி சிறகுகள்,

நான் இறந்தவுடன் என்னை ஸ்ரீதேவி கல்லறை அருகே புதைத்துவிடுங்கள்: பிரபல இயக்குனர்

பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஒருவர் தான் இறந்தவுடன் தன்னுடைய உடலை ஸ்ரீதேவி கல்லறை அருகே புதைத்து விடுங்கள் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பேய் பிடித்தவர்களை குணப்படுத்த, மருத்துவர்களுக்கு புதிய பாடப்பிரிவு..! பனாரஸ் பல்கலைக்கழகம்.

பேய் பிடித்தவர்களை குணப்படுத்த மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்கும் புதிய பாட பயிற்சி திட்டத்தை பனாரஸ் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.

பாரதிராஜாவின் 'குற்றப்பரம்பரை' படம் குறித்த முக்கிய தகவல்!

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் கனவு திரைப்படம் என்று கூறப்படும் 'குற்றப்பரம்பரை' திரைப்படத்தின் பூஜை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உசிலம்பட்டி அருகே