close
Choose your channels

சர்கார் கதை விவகாரத்தில் திடீர் திருப்பம்

Tuesday, October 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி திருநாள் அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை, தான் கடந்த 2007ஆம் ஆண்டு எழுதிய 'செங்கோல்' என்ற கதை என்று கூறி வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

இந்த வழக்கின் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சன்பிக்சர்ஸ் சார்பில் நீதிமன்றத்தில் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்து கொண்டதாக தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதி சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்தார்.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது என்ன மாதிரியான சமரசம் ஏற்பட்டது என்பது குறித்து தெரியவரும் என கூறப்படுகிறது. 'சர்கார்' படக்குழுவினர் வருண் ராஜேந்திரனுடன் திடீரென சமரசம் செய்துள்ளது திடீர் திருப்பமாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment