close
Choose your channels

சிம்பு பட நாயகிக்கு கோவில் கட்டி தீபாரதனை காண்பித்த ரசிகர்கள்: வைரல் புகைப்படம்!

Monday, February 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் ஏற்கனவே குஷ்பு உள்ளிட்ட நடிகைகளுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்த ரசிகர்கள் தற்போது சிம்பு பட நாயகி ஒருவருக்கும் கோவில் கட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து இருந்தார் என்பதும் தெரிந்ததே. மேலும் அதே நாளில் வெளியான ஜெயம் ரவியின் ’பூமி’ படத்திலும் நிதி அகர்வால் தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையுலகில் ஒரே நாளில் இரண்டு படங்களில் அறிமுகமான நடிகை நீதி அகர்வாலுக்கும் ரசிகர்கள் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நிதி அகர்வால் ரசிகர்கள் அவருக்கு கோவில் கட்டி தீபாராதனை காண்பித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. குஷ்புவுக்கு அடுத்து நிதி அகர்வாலுக்கு தான் கோவில் கட்டி உள்ளோம் என அவரது ரசிகர்கள் பெருமையுடன் கூறிக் கொண்டே தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

நடிகை நிதி அகர்வாலுக்கு கோயில் கட்டிய புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment