5 கோல்ட் ஸ்டார்களுக்கான டாஸ்க்.. திடீரென கண்ணீர் விடும் பூர்ணிமா.. என்ன நடந்தது?

  • IndiaGlitz, [Friday,December 08 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் சளைப்பில்லாமல் சண்டை போட்டுக்கொண்டும், டாஸ்க்களை ஆவேசமாகவும் விளையாடி வருகின்றனர்.

இந்த சீசனில் டைட்டில் வின்னர் யாராக இருக்கும் என்று யூகிக்க முடியாத அளவுக்கு தங்களது திறமைகளை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கோல்ட் ஸ்டார்களுக்கு நடக்கும் டாஸ்க்குகளில் வெறித்தனமாக விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜாக்பாட் பரிசாக ஐந்து கோல்ட் ஸ்டார்களுக்கான டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் அறிவித்துள்ளார். இந்த ஸ்டார்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் விளையாடலாம் அல்லது வேறு ஒருவருக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காகவும் விளையாடலாம் என பிக் பாஸ் அறிவித்துள்ளதை அடுத்து பூர்ணிமா மற்றும் மாயா ஆகிய இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

எனக்கு பயமாக இருக்கிறது என்றும், விஷ்ணு தான் என்னை முதலில் அட்டாக் பண்றதா இருக்கும் என்று பூர்ணிமா மாயாவிடம் அழுது கொண்டே கூறுகிறார். மொத்தத்தில் இந்த ஐந்து ஸ்டார்களுக்கான டாஸ்க்கில் யார் வெற்றி பெறுவார்கள்? இந்த டாஸ்க்கில் கிடைக்கும் போட்டியாளருக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும்? என்பதை இன்றைய எபிசோடில் பொறுத்திருந்து பார்க்கலாம்.