நடிகை சாயாசிங் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

  • IndiaGlitz, [Wednesday,May 15 2024]

நடிகை சாயா சிங் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்த நிலையில் அதிரடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல கன்னட நடிகை சாயா சிங் தனுஷ் நடித்த ’திருடா திருடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனை அடுத்து ’கவிதை’ ’அருள்’ ’அம்மா அப்பா செல்லம்’ ’ஜெயசூர்யா’ ’திருப்பாச்சி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் ’வல்லமை தாராயோ’ 'உயிரே உயிரே ’’உள்குத்து’ ’இரவுக்கு ஆயிரம் கண்கள்’ ’தமிழரசன்’ போன்ற நடித்த சாயாசிங் தற்போது ஒரு கன்னட படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை சாயாசிங் பெங்களூரில் தனது தாயார் வீட்டில் வசித்து வரும் நிலையில் அவரது வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகள் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டது. 66 கிராம் தங்க நகை மற்றும் 150 கிராம் வெள்ளி நகைகள் திருடு போனதாக விசாரணையில் தெரியவந்ததை அடுத்து காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் சாயாசிங் வீட்டில் வேலை செய்து வந்த உஷா என்ற வேலைக்கார பெண் தான் நகைகளை திருடினார் என தெரிய வந்தவுடன் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சி எப்படி இருந்தது.. நடிகை ராஷ்மிகா மந்தனா கூறிய முக்கிய தகவல்..!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட்டிலும் பிஸியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் 10  ஆண்டு  

2047ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த நாடாக்க இதுவே வழி - VIT விஸ்வநாதன் அறிவுரை

நிறுவனங்களுடன் கூடி மாணவர்கள் திறன் மேம்பாடு செய்வதிலும் விஐடி-யின் வேந்தர் ஜி.விஸ்வநாதன் முன்னோடியாக இருந்து செயல்பட்டு வருகிறார்” என்று பிங்காம்டன் பல்கலைக்கழகத் தலைவர் ஹார்வி ஸ்டெங்கர் கூறினார்.

குடும்ப தொழில் முறையை அடுத்த தலைமுறையும் எடுத்து நடத்துவதே ஆகசிறந்தது -மாதம்பட்டி ரங்கராஜ்

சவுக்கு கட்டை ,விறகு ,அடுப்பு ,நெருப்பு ,வியர்வை மற்றும் சமையல் இது எல்லாமே என்னுடன் எனக்குள் இணைந்த ஒன்று ஆகும்.எனது அப்பா சமைக்கும் காலத்தில் ஆரம்பத்திலேயே விறகில் தான் சமைத்தார்...

டிவி தொகுப்பாளினியை தீர்த்தம் கொடுத்து ஏமாற்றிய பூசாரி..   போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

டிவி தொகுப்பாளனி மற்றும் நடிகையை தீர்த்தம் கொடுத்து பூசாரி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வாரம் எத்தனை தமிழ் திரைப்படங்கள்? ஓடிடி ரிலீஸ் குறித்த முழு தகவல்கள்..!

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது போலவே ஓடிடியில் ஏற்கனவே ரிலீசான படங்கள் மற்றும் புதிய வெப் தொடர்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன