close
Choose your channels

உலகத் தமிழ் அறிவிப்பாளர் அப்துல் ஹமீதுக்கு என்ன ஆச்சு? தீயாய் பரவும் வதந்தி..!

Monday, June 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்து அதன் பின் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அப்துல் ஹமீத் திடீரென காலமானதாக வதந்தி பரவி கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சில மணி நேரங்களாக அப்துல் ஹமீது காலமானார் என்று வதந்தி பரவி கொண்டிருக்கும் நிலையில் அவரது தரப்பு இது வதந்தி, இலங்கையில் நல்ல உடல் நலத்துடன் அவர் உள்ளார் என்று மறுப்பு தெரிவித்துள்ளது.

தொலைக்காட்சி இல்லாத காலத்தில் இலங்கை வானொலியில் நிகழ்ச்சிகளை அப்துல் ஹமீத் தொகுத்து வழங்கினார் என்பதும் அவரது தமிழ் உச்சரிப்பு, கணீர் என்ற குரல் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சன் டிவியில் 'பாட்டுக்கு பாடு' என்ற நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கியதை யாராலும் மறக்க முடியாது.

இந்த நிலையில் ஏற்கனவே மூன்று முறை அவர் இறந்துவிட்டதாக வதந்தி பரவிய நிலையில் தற்போது மீண்டும் பரவி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.