தனுஷின் 'ராயன்' படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமில்லை.. சொன்னது யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,February 21 2024]

தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ஸ்கிரிப்ட் குறித்த வதந்தி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

தனுஷ் கதை, திரைக்கதை, எழுதி நடித்து இயக்கி வரும் ‘ராயன்’ திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் தனுசுக்கு சொந்தமானது இல்லை என்றும் அவரது சகோதரர் செல்வராகவன் தான் ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்ததாகவும் வதந்தி பரவி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் செல்வராகவன் ஒரு கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் அவர் தான் ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்து இருப்பார் என்று ரசிகர்களும் சிலர் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வதந்திக்கு விளக்கம் கொடுத்துள்ள செல்வராகவன் தனுஷின் 50வது படமான ‘ராயன்’ படத்தின் ஸ்கிரிப்ட் நான் எழுதியதாக வெளிவந்திருக்கும் செய்தி உண்மையானது அல்ல என்றும் ‘ராயன்’ படத்தின் ஸ்கிரிப்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இதன் மூலம் தெளிவுபடுத்துகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இது முழுக்க முழுக்க தனுஷின் கனவு ஸ்கிரிப்ட் என்றும் அவர் சொந்தமாகவே இந்த படத்தின் கதை திரைக்கதை எழுதிய உள்ளார் என்றும் இந்த படத்தில் நான் ஒரு நடிகனாக மட்டுமே எனது பங்களிப்பை தந்திருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் உங்கள் அனைவரையும் போல நானும் என் சகோதரனின் ‘ராயன்’ படத்தை பார்க்க ஆவலுடன் உள்ளேன் என்றும் அவரது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு பார்த்து நான் பெருமை கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

More News

த்ரிஷாவை பற்றி நான் அப்படி சொல்லவே இல்லை.. அந்தர்பல்டி அடித்த அரசியல்வாதி..!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜு என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திரையுலகில் இருந்து கடும் எதிர்ப்பு

நடிகர் கவின் குறித்து பரவி வரும் வதந்தி.. சுந்தர் சி தரப்பு அளித்த விளக்கம்..!

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் 'கலகலப்பு 3' திரைப்படத்தில் நடிகர் கவின் நடிப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி ஒன்று பரவி வரும் நிலையில் இது குறித்து சுந்தர் சி தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.

கூவத்தூர் விவகாரத்தில் நடிகைகளை சம்பந்தப்படுத்திய விவகாரம்..ஆர்கே செல்வமணி அறிக்கை..!

கூவத்தூர் விவகாரத்தில் நடிகைகளை சம்பந்தப்படுத்தி பேசிய முன்னாள் அதிமுக பிரமுகருக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர் கே செல்வமணி இது குறித்து கண்டனம்

ஓடிடி விஷயத்தில் முக்கிய முடிவெடுத்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்: தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி..!

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் இன்று நடந்த நிலையில் இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி அளித்துள்ளார்,

பாடலாசிரியர் சினேகன் அளித்த புகார்.. தமிழ் நடிகை அதிரடி கைது..!

தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான சினேகன் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ் நடிகை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.