19 வருடங்கள் கழித்து ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைகோர்க்கும் பிரபல இயக்குனர்.....!

காதல் படங்களை இயக்கிய பிரபல இயக்குனரான கதிர், சுமார் 19 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைகோர்க்க உள்ளார்.

இதயம், காதல் தேசம், காதலர் தினம், உழவன் மற்றும் காதல் வைரஸ் போன்ற அற்புத காதல் காவிய திரைப்படங்களை, தமிழ் சினிமாவிற்கு தந்தவர் தான் இயக்குனர் கதிர். தமிழில் இளையராஜா இசையமைப்பில், இதயம் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இவர். இவரின் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு உற்சாகம், காதலர்களுக்கு கொண்டாட்டம் தான். காரணம் அந்த அளவிற்கு இவர் படங்களில் காதலுக்கு முதன்மையும், முக்கியத்துவமும் கொடுத்திருப்பார். மேலும் அப்பாஸ், நடிகை ஹீரா, குணால், ரம்பா ரிச்சர்ட் மற்றும் ஸ்ரீதேவி விஜய்குமார் உள்ளிட்ட நடிகர்களை, தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்ததும் இவரே. 2002-இல், இவர் கடைசியாக தமிழில் இயக்கிய 'காதல் வைரஸ்' படம் தோல்வியை தழுவியது.

இந்தநிலையில் தயாரிப்பாளர் ரங்கநாதன் அவர்களின் மகன், கிஷோரை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,
கடந்த 2016-இல் Nan Love Track என்ற கன்னட படத்தை இயக்கியிருந்த நான், அதன்பின் சர்வதேச படங்களில் வேலை செய்து வந்தேன். தயாரிப்பாளர் ரங்கநாதன் அவரின் மகன் கிஷோரை, தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகப்படுத்த ஒரு படத்தை இயக்கவேண்டும் என்று என்னை அணுகினார். நான் பல புதிய நடிகர்களை சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளதால், இவரையும் நடிக்க வைக்க சம்மதித்தேன். என்னுடைய பிற படங்களை போலவே, இதுவும் காதல் கதையம்சம் கொண்ட திரைப்படம் தான். இசை காதல் கதை கொண்ட இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் இசையமைக்கிறார். இன்னும் இசையமைப்பு தொடங்காத நிலையில், மற்ற நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் ரஹ்மான் மற்றும் இயக்குனர் கதிரின் வெற்றிக்கூட்டணி, கிட்டத்தட்ட 19 வருடங்களுக்குப் பின் மீண்டும் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

படப்பிடிப்பின் போது நடிகர் அருண் விஜய்க்கு காயம்… இன்ஸ்டாவில் அவரே கொடுத்த விளக்கம்!

பிரபல இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகிவரும் புதுப்படம் ஒன்றில் நடிகர் அருண்விஜய் நடித்துவருகிறார்.

மாலத்தீவு சென்ற நடிகை ஹன்சிகா … மீண்டும் பிகினி புகைப்படம் வைரல்!

தமிழ் சினிமாவில் பப்ளி நடிகையாக வலம்வந்த நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது படு ஸ்லிம்மாக மாறி இருக்கிறார்.

'சார்பாட்டா பரம்பரை': இயக்குனர் ரஞ்சித்துக்கு அதிமுக நோட்டீஸ்!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி உள்பட பலர் நடித்த 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கு ஒட்டுமொத்த திரையுலகினர்களும்

5 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வந்த இசையமைப்பாளர்: ஹரி படத்தில் சிறப்பு தோற்றம்!

இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல்வேறு அவதாரங்கள் எடுத்த ஒருவர் ஐந்து வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் ஹரி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார்.

முதல் பாகம் ரிலீசுக்கு முன்பே 2வது பாகத்தின் படப்பிடிப்பு: 'புஷ்பா' உரிமைக்கு போட்டி!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக