ரகுமானுக்கு மேலும் இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைக்குமா?

  • IndiaGlitz, [Wednesday,December 14 2016]

2009ல் 'ஸ்லம் டாக் மில்லியனர்' என்ற திரைப்படத்துக்கு இசையமைத்ததற்காக ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்திய நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர் ஏ.ஆர்.ரகுமான். சினிமா உலகின் மிக உயரிய சர்வதேச ஆங்கீகாரமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதை முதல்முறையாக வென்ற இந்திய இசைக் கலைஞர் ரகுமான் ஆவார். இதுவரை ஆஸ்கர் வென்றுள்ள ஒரே இந்திய இசையமைப்பாளரும் அவர்தான்.

இந்நிலையில் சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வாரிக் குவித்திருக்கும் நம் இசைப்புயl மீண்டும் ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

பிரேசில் நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் பீலேவின் வாழ்க்கைக் கதையான 'பீலே-தி பர்த் ஆஃப் தி லெஜண்ட்' என்ற திரைப்படத்துக்காக ரகுமான் உருவாக்கிய கிங்கா' என்ற பாடலும் பின்னணி இசையும் ஆஸ்கர் விருதுகளுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஆஸ்கர் விருதுகளில் சிறந்த பாடல் (Best Original Score Song) என்ற பிரிவுக்கான நெடும் பட்டியலில் (long list) 'கிங்கா' பாடல் இடம்பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்த ஆண்டு வெளியான 91 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

அதே போல் சிறந்த பின்னணி இசை (Best Original Score) என்ற பிரிவிலும் 'பீலே' படம் இடம்பெற்றுள்ளது. எனவே ரகுமானுக்கு இந்த ஆண்டு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய நாட்டுக்கும் இசையுலகத்துக்கும் பல பெருமைகளைத் தேடித் தந்துள்ள ஏ.ஆர்.ரகுமான் இந்த ஆண்டு மேலும் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வெல்ல IndiaGlitz சார்பில் வாழ்த்துகிறோம்.

More News

ஜெ. மரணம் இயற்கையானதா?- உச்ச நீதிமன்றத்தில் மனு

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மறைந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்னும் அவரது இழப்பிலிருந்து தமிழக மக்களும் அஇஅதிமுக வின் கோடான கோடி தொண்டர்களும் மீளவில்லை.

சூர்யாவுடன் நேருக்கு நேர் மோதும் சசிகுமார்

நடிகர்-தயாரிப்பாளர் சசிகுமாரின் அடுத்த படம் ‘பலே வெள்ளையத் தேவா’ டிசம்பர் 23, 2016 அன்று கிறிஸ்துமஸ் விடுமுறை சீசனுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'பைரவா' பாடல்கள் உரிமை யாருக்கு?

வர்தா புயல் பாதிப்புகளிலிருந்து சென்னையும் தமிழகத்தின் இதர பகுதிகளும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கின்றன.

சசிகலாவிடம் சரத்குமார் வைத்த கோரிக்கை

அதிமுகவின் மூத்த தலைவர்கள் தாங்கள் சின்னம்மா என்று அன்புடன் அழைக்கும் சசிகலாவை கட்சியின் பொது செயலாளர் பதவியை ஏற்று வழி நடத்தி செல்லவேண்டும் என்று வலியுறுத்தி வருவது அனைவரும் அறிந்ததே.

போயஸ் கார்டனை விட்டு வெளியேறுகிறாரா சசிகலா?

அம்மா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட செல்வி ஜெ ஜெயலலிதா மறைவிற்கு பின் பல சர்ச்சைகள் அவருடைய உடன் பிறவா சகோதரி சசிகலாவை சுற்றிய வண்ணம் இருக்கின்றன.