ரஜினி, கமல், விஜய் இடத்திற்கு மகேஷ்பாபுவை அழைத்து செல்லும் முருகதாஸ்

  • IndiaGlitz, [Wednesday,August 31 2016]

இந்தியாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரும் தமிழ், இந்தி மொழிகளில் பல வெற்றி படங்களை இயக்கியவருமான ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது மகேஷ்பாபு நடித்து வரும் ஆக்சன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் உள்ள தனியார் தீம் பார்க் ஒன்றில் பிரமாண்டமான செட் ஒன்று தயாராகி வருகிறது. இந்த செட்டில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த படப்பிடிப்பில் பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இதே தீம்பார்க்கில்தான் ரஜினியின் '2.0', கமலின் 'உத்தமவில்லன்', விஜய்யின் 'தெறி' உள்பட பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மகேஷ்பாபு, ராகுல் ப்ரித்திசிங், எஸ்.ஜே.சூர்யா, ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார்.

More News

ரஜினி-ரஞ்சித் மீண்டும் இணையும் படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன?

சமீபத்தில் தனுஷ் ஒரு மிகப்பெரிய செய்தியை வெளியிட்டார். ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கும் படத்தை தயாரிப்பதில் பெருமை அடைகிறேன்...

சீயான் விக்ரமின் 'இருமுகன்' ரன்னிங் டைம்

விக்ரம், நயன்தாரா நடிப்பில் அரிமாநம்பி பட இயக்குனர் ஆனந்த்சங்கர் இயக்கிய 'இருமுகன்' திரைப்படம் உலகம் முழுவதும் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது...

ரஜினி-விஜய் திருமணங்களில் ஒரு அபூர்வ ஒற்றுமை

ஒரு நடிகருக்கு நான்கு தலைமுறைகள் ரசிகர்களாக இருக்கின்றனர் என்றால் அதைவிட வேறு ஏதாவது ஒரு பெருமை வேண்டுமா? அத்தகைய பெருமையை பெற்றிருப்பவர்...

அதிமுகவில் இணைந்தாரா நயன்தாரா?

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நாயகியான நயன்தாரா, விரைவில் அரசியலில் குதிக்கவுள்ளதாகவும், அவர் அதிமுகவை...

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அருண்விஜய்யின் விளக்கம்

கடந்த இரண்டு நாட்களாக அருண்விஜய் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. அருண்விஜய் கைது செய்யப்பட்டதாகவும்...