எஸ்பிபிக்காக மீண்டும் கூட்டுப்பிரார்த்தனை: தேதி, நேரம் அறிவிப்பு

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த ஐந்தாம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. அவரது உடல்நிலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் கவலைக்கிடமாக இருந்ததையடுத்து அவருக்காக திரை உலகினர் மட்டுமின்றி உலகிலுள்ள ஒட்டுமொத்த இசை ரசிகர்கள் கடந்த 20ஆம் தேதி கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

இந்த கூட்டுப் பிரார்த்தனையின் பலனாக தற்போது மயக்க நிலையிலிருந்து 90% எஸ்பிபி அவர்கள் மீண்டுவிட்டதாகவும், அவர் தனது மனைவி மற்றும் மகனை அடையாளம் கண்டு அவர்களின் நலன் விசாரித்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன. மேலும் கடந்த சில நாட்களாக எஸ்பிபி அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரது உடல்நிலை சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது எஸ்பிபி அவர்கள் குணமாக வேண்டும் என்பதற்காக மீண்டும் ஒரு கூட்டுப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு 27-ஆம் தேதி அதாவது நாளை மாலை 6 மணி முதல் 6.05 வரை இந்த கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும் என்றும் உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் மொழி, இனம், மதம் கடந்து அனைவரும் ஒன்று கூடி நம் எஸ்பிபி அவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரார்த்தனைகள் பலனாக எஸ்பிபி அவர்கள் விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கொரோனாவால் பலியானவருக்கு கிடைத்த ரூ.60 லட்சம்: திடீரென பங்கு கேட்ட இரண்டாவது மனைவி

கொரோனாவால் பலியாகிய ரயில்வே போலீஸ் குடும்பத்திற்கு கிடைத்த நிதியுதவியான ரூ.60 லட்சத்தில் திடீரென பங்கு கேட்டு பலியானவரின் இரண்டாவது மனைவி நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு

ரசிகரின் போஸ்டரை ரீடுவிட் செய்த சூர்யா: இணையத்தில் வைரல்

கடந்த சில ஆண்டுகளாக படக்குழுவினர்கள் வெளியிடும் போஸ்டரை போலவே அச்சு அசலாக ரசிகர்கள் டிசைன் செய்யும் போஸ்டர்களும் உள்ளது என்பதும் எது உண்மையான படக்குழுவினர்

நேரில் தாக்கும் எதிரிக்கு பயப்பட வேண்டாம், புகழ்ந்து பேசும் நண்பனுக்கு பயப்படுங்கள்: ராதிகா

பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' என்ற திரைப்படத்தில் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய நடிகை ராதிகா, சமீபத்தில் திரையுலகில் 42 ஆண்டுகள்' என்ற மைல்கல்லை எட்டினார்.

'பிக்பாஸ் தமிழ்' டைட்டில் வின்னர் ஆரவ்வுக்கு திருமணம்: மணப்பெண் நடிகையா?

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் டைட்டின் வின்னரான ஆரவ்வுக்கு திருமணம் என்ற செய்தி இணையதளங்களில் வைரலாகி வருகிறது

விஜய் உறவினர் சினேகா பிரிட்டோவின் திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல்

தளபதி விஜய்யின் மாமா மகளும் விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவுக்கும், நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷுக்கும்