விஜய் மீது தேச குற்ற வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்..!

  • IndiaGlitz, [Friday,August 23 2024]

விஜய் நேற்று அறிமுகம் செய்த கொடியில் சர்ச்சைக்குரிய அம்சங்கள் இருப்பதால் அவர் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆர்டிஐ செல்வம் என்பவர் புகார் அளித்துள்ளார்.

அவர் தனது புகாரில் கேரளா அரசின் போக்குவரத்து சின்னமான யானை தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் இடம் பெற்றுள்ளதாகவும் இந்தியாவை அவமதிக்கும் வகையில் ஸ்பெயின் நாட்டு தேசியக் கொடியின் நிறத்தை விஜய் தனது கட்சி கொடியாக வைத்துள்ளார் என்றும் எனவே அவர் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக வெற்றிக்கழக கொடி தேர்தல் விதிமுறைகள் மற்றும் சட்டத்திற்கு புறமான சின்னங்கள் இருப்பதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள தமிழக வெற்றிக் கழகம், எங்கள் கட்சி கொடியில் யானை சர்ச்சை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டால் பதிலளிக்க முடிவு செய்துள்ளோம். மேலும் தங்கள் கொடியில் 2 யானை, வாகை மலர், நட்சத்திரங்கள் இருக்கிறது. கொடியை உருவாக்க கட்சிக்கு உரிமை உள்ளது. எனவே, தேர்தல் ஆணையம் இதுகுறித்து கேள்வி எழுப்பினால் பதில் சொல்வோம்’ என தெரிவித்துள்ளது.

More News

தனுஷின் 'ராயன்' உள்பட இன்று என்னென்ன படங்கள் ஓடிடியில்? முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியான படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில்

விருது பெற்ற கையோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு.. குஷியில் சீரியல் நடிகர்..!

சமீபத்தில் விகடன் விருது வழங்கும் விழாவில் முக்கிய விருதை பெற்ற சீரியல் நடிகர் அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினி, தனுஷ், சிம்பு பட நாயகிக்கு திருமண நிச்சயதார்த்தம்.. க்யூட் புகைப்படங்கள்..!

ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் சிம்பு படங்களில் நாயகியாக நடித்த நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வங்கி கணக்கில் பணம்: விஜய் கொடியேற்றிய தினத்தில் ரஜினி செய்த தரமான செயல்..

தளபதி விஜய் நேற்று தனது தமிழக வெற்றி கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து ஏற்றிய நிலையில் அதே நாளில் ரஜினிகாந்த் மாணவ மாணவிகளுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் கல்வி உதவிக்காக தனது

நாங்க சோத்துக்கு கஷ்டபடுறத  நீ வந்து பாத்தியா ? பயில்வான் ரங்கநாதனுக்கு  சுருளிராஜன் மனைவி பதிலடி..!

நடிகர் பயில்வான் ரங்கநாதன், சுருளி ராஜனுக்கு மது பழக்கம் இருந்தது என்றும் சோத்துக்கு அவரது குடும்பம் கஷ்டப்பட்டதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய நிலையில்