சன்னி லியோன் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்

  • IndiaGlitz, [Saturday,February 10 2018]

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் தமிழ் உள்பட மூன்று மொழிகளில் நடித்து வரும் 'வீரமாதேவி' என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் சன்னிலியோன் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் இனோச் மோசஸ் என்பவர் நசரத்பேட்டை காவல் நிலையத்திலும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரில் சன்னிலியோனின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் உள்ளது. இவை இளைஞர்களின் மனதை கெடுக்கும் வகையில் உள்ளது. இந்த நிலையில் சன்னிலியோன் படப்பிடிப்பு சென்னையில் நடந்தால் அவரை காண பெருங்கூட்டம் கூடும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க சன்னிலியோன் சென்னை படப்பிடிப்பில் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும். மேலும் அவர் நடிக்கும் வீரமாதேவி திரைப்படம் தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றும் வகையில் இருப்பதால் அவர் இந்த படத்தில் நடிக்கக்கூடாது என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

சன்னிலியோன் மீதான புகாருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் எந்தவகையான நடவடிக்கை எடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

கமல் டைட்டில், மூன்று ஹீரோயின்கள்: ஜெய் காட்டில் மழை

நடிகர் ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பலூன் மற்றும் கலகலப்பு 2' ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அவர் தற்போது 'நீயா 2' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினியின் 'காலா' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியுடன் மாஸ் போஸ்டர்: தனுஷ்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் '2.0' மற்றும் 'காலா; ஆகிய இரண்டு திரைப்படங்களும் இவ்வருடம் ரிலீஸ் ஆகும் என்பது ஏற்கனவே தெரிந்திருந்தாலும் இரண்டில் எந்த படம் முதலில் வெளியாகும்

இரண்டாவது படத்திலேயே இதுவரை ஏற்று நடிக்காத வேடத்தில் தனுஷ்

தனுஷ் இயக்கிய முதல் படமான ப.பாண்டி திரைப்படம் அனைத்து தரப்பினர்களின் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் இரண்டாவது படத்தை விரைவில் இயக்கவுள்ளார்

இரண்டே மாதத்தில் விடிய போகும் 'செக்க சிவந்த வானம்'

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படமான 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தின் முழு விபரங்களுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியானது குறித்து பார்த்தோம்.

தீபா வீட்டுக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரி சுவர் ஏறி குதித்தது ஏன்?

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியலில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று அவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்வதாக தகவல்கள் பரவியது