சென்னை மெரீனாவில் மாணவர்கள் மத்தியில் ஹீரோவான காவலர்

  • IndiaGlitz, [Friday,January 20 2017]

சென்னை மெரீனாவில் கடந்த நான்கு நாட்களாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்தி வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் வரலாறு காணாத வகையில் அனைத்து தரப்பினர்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக நடந்து வருகிறது., இந்தியாவிலேயே இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் எந்தவித வன்முறையும் இதுவரை நடைபெற்றது இல்லை.

இந்நிலையில் மாணவர்களின் போராட்டத்திற்கு காவல்காக்கும் காவல்துறையினர்களும் பொறுப்புடன் செயல்பட்டு வருகிறனர். காவல்துறையினர்களாக இருந்தாலும் அவர்களும் அடிப்படையில் தமிழர்கள் என்பதால் இந்த போராட்டத்திற்கு மனதளவில் ஆதரவு தந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் திடீரென இன்று காலை மெரினாவில் பாதுகாப்பிறகு சீருடையில் இருந்த காவலர் ஒருவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களின் மத்தியில் மைக் பிடித்து பேசினார். அவர் கூறியதாவது: ''இது ஒரு துவக்கம்தான். இன்னும் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசுவதால் எனக்கு எந்த பயமும் இல்லை. காவல்துறையில் இருக்கும் எங்களுக்கும் உணர்வு இருக்கிறது. இங்கு சீருடை இல்லாமல் நிறைய காவல்துறைகாரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த மண்ணில்தான் நேதாஜியும் பிறந்தார். காந்தியும் பிறந்தார்.

காந்தி பிறந்த மண்ணு என்று ஓட்டு கேட்க வந்த மோடிக்கு அப்போது தெரியவில்லையா? விவசாயத்தை காப்பாற்ற வேண்டும். தமிழனுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம். உயரதிகாரிகள் கொடுத்த பிரச்ஷர் காரணமாக தற்போது இந்த காவல்துறைகாரர்கள் என்னை கூப்பிடுகின்றனர். என் சொந்த ஊர் மதுரை. ராமநாதபுரம்தான் என்னுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் இல்லாமல் நாங்கள் எங்கு பஞ்சம் பிழைக்க செல்வது. நாங்கள் அமெரிக்காவா செல்ல முடியும். எங்களால் பேச முடியாமல் இருக்கிறோம். ஜல்லிக்கட்டு வெற்றி பெறும். இனி அடுத்தது மண் கொள்ளையை நாம் தடுக்க வேண்டும் '' .

இவ்வாறு உணர்ச்சிபூர்வமாக பேசிய அந்த காவலரை உடனடியா காவல்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். மாணவர்கள் மத்தியில் காவலர் ஒருவரே போராட்டத்திற்கு வெளிப்படையாக ஆதரவு கொடுத்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

ஐபிஎல் கிரிக்கெட் போல இனி ஜல்லிக்கட்டு லீக். நடிகர் வீரா

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு தனது வீட்டின் முன் நேற்று முன் தினம் இரவு முதல் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகிறார். அவருடன் பலரசிகர்களும் நடிகர்களும் உட்கார்ந்து போராடி வருகின்றனர்...

நடிகர் சங்கத்தின் மெளன போராட்டத்தில் அஜித்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒருபக்கம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நான்கு நாட்களாக போராடி வரும் நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று ஒருநாள் மெளன போராட்டம் நடத்துவதாக அறிவித்தது...

ஊடகங்களுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் வேண்டுகோள்

இந்நிலையில் நடிகர் சங்கம் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மெளன அறப்போராட்டத்தை நடத்தவுள்ளது. இந்த போராட்டம் மாணவர்களின் போராட்டத்தை ஊடகங்களில் இருந்து திசை திருப்பும் வகையில் உள்ளதாக மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர்...

ரயில் மறியல் செய்யும் மாணவர்களுக்கு ஐபிஎஸ் அதிகாரியின் அன்பு எச்சரிக்கை

ஜல்லிக்கட்டு போராட்டம் அல்ங்காநல்லூர், சென்னை மெரீனா மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்து வருகிறது.

ஜல்லிக்கட்டை காப்பாற்ற கைகோர்ப்போம், ஜெயிப்போம். கீர்த்திசுரேஷ்

தமிழர்களின் பாரம்பரிய, கலாச்சார, பண்பாடான வீர விளையாட்டு ஜல்லிக்கட்டை காப்பாற்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் இரவு பகல் பாராது, கடுங்குளிரில் கடந்த மூன்று நாட்களாக சென்னை மெரீனா கடற்கரை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போராடி வருகின்றனர்.