இதுதாண்டா மரண மாஸ்க்!

சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து கொண்டே இருப்பதால் தகுந்த காரணம் இல்லாமல் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்றும் அத்தியாவசிய காரணத்தால் வெளியே வந்தால் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர், காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அரசு என்னதான் சீரிய நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்கள் இன்னும் கொரோனாவின் சீரியஸ் தெரியாமல் ஒருசிலர் மாஸ்க் அணியாமல் வெளியே செல்கின்றனர்.

இந்த நிலையில் கோழிக்கடையில் கோழி வாங்கிவிட்டு சைக்கிளில் வரும் ஒருவர் மாஸ்க் இல்லாமல் இருந்த நிலையில் அவரை காவல்துறை அதிகாரி ஒருவர் விசாரணை செய்கிறார். உடனே அவர் கோழிக்கடையில் வாங்கிய பில்லை வாயில் வைத்து கொண்டு இதுதான் மாஸ்க்’ என்று கூறுகிறார்.

கோழிக்கறி வாங்க காசு இருந்த அவருக்கு ஒரு மாஸ்க் அல்லது கர்சீப் வாங்க காசில்லையா? என காவல்துறை அதிகாரி விசாரணை செய்யும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மாஸ்க் இல்லாமல் தைரியமாக வெளியே வந்தது மட்டுமின்றி கோழிக்கடையில் கொடுத்த பேப்பரை மரண மாஸ்க்காக வைத்திருக்கும் இவர் போன்றவர் இருக்கும் வரை கொரோனாவுக்கு கொண்டாட்டம் தான்
 

More News

பிக்பாஸ் தமிழ் நடிகை பாடிய முதல் பாடல்: இணையத்தில் வைரல்

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் நடிகையுமான ஜனனி ஐயர் பாடிய முதல் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புது வரவு ஹுண்டாய் வெர்னா!!! எப்படியிருக்கும்???

டீசல் கார்களில் முன்னிலையில் இருக்கும் ஹோண்டாய் நிறுவனம் தற்போது தனது வரவை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

கொரோனா: சுவீடன் இன்றுவரை ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கவில்லை!!! காரணம் என்ன???

கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கைப் பிறப்பித்து கடும் பொருளாதார மந்தத்தைச் சந்தித்து வருகின்றன

சென்னையில் அனைத்து தனிக்கடைகளும் செயல்பட அனுமதி!

சென்னையில் அனைத்து தனிக்கடைகளும் செயல்பட அனுமதி என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நிபந்தனைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது

ஒரே தெருவில் நேற்று 19, இன்று 40: சென்னையில் கோரத்தாண்டவமாடும் கொரோனா

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியின் ஒரே தெருவில் 19 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று ஒரு தகவல் உறுதி செய்த நிலையில் இன்று அதே தெருவில் 40 பேர் கொரோனாவால்