ஓடும் ரயிலில் நடிகைக்கு பாலியல் தொல்லை: உதவிக்கு வராத சக பயணிகள்

  • IndiaGlitz, [Friday,February 02 2018]

விக்ரம் நடித்த காசி, பீமா உள்பட பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நடிகை சனுஷா. இவர் சமீபத்தில் ரயிலில் பயணம் செய்தபோது சக பயணி ஒருவர் பாலியல் தொல்லை செய்ததாக கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டார்

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரயிலில் ஏசி கோச்சில் சென்று கொண்டிருந்த சனுஷா, இரவில் பர்த்தில் அயர்ந்து தூங்கியுள்ளார். அப்போது தனது உதட்டை யாரோ பிடிப்பது போல் இருக்கவே திடுக்கென விழித்து பார்த்த சனுஷாவுக்கு தனது உதடை ஒருவர் கையால் பிடித்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அலறிய சனுஷா, சக பயணிகளிடம் உதவி கேட்டு குரல் கொடுத்துள்ளார். ஆனால் அனைவரும் தூங்குவது போல் நடித்தனர். இந்த நிலையில் பக்கத்து கம்பார்ட்மெண்டில் இருந்து உதவிக்கு வந்த ஒருவர் டிடிஆரை அழைத்து வந்தார். டிடிஆர் நடந்த விஷயத்தை கேட்டறிந்து பின்னர் ரயில்வே போலீசுக்கு தகவல் அளித்தார். ரயில் அடுத்த ஸ்டேஷன் வரும்வரை பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபர் தப்பித்துவிடாமல் செல்லும் வகையில் கையை நன்றாக பிடித்து கொண்டிருந்தார் சனுஷா.

ஒருசில நிமிடங்களில் ரயில்வே போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை செய்தபோது அவர் பெயர் ஆண்டோ போஸ் என்பதும், தங்க நகை தயாரித்து விற்பனை செய்யும் அவர் கன்னியாகுமரியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

More News

மத்திய பட்ஜெட் குறித்து கமல்ஹாசனின் காட்டமான விமர்சனம்

கிராமப்புறங்களுக்கு மத்திய அரசின் பார்வை திரும்பியுள்ளதாகவும், மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளது என்பது ஆறுதலாக உள்ளதாகவும் கூறிய கமல்,

ஐசியூவில் இருந்து நார்மல் வார்டுக்கு கொண்டு வந்துள்ளோம்: பட்ஜெட் குறித்து தமிழிசை

தமிழிசை செளந்திரராஜன்: இந்த பட்ஜெட் தாக்கல் என்பது ஐசியூவில் இருக்கும் நோயாளியை நார்மல் வார்டுக்கு கொண்டு வருவது போல இப்போது முன்னேற்றம் செய்து வந்துள்ளோம்.விரைவில் அதை நடக்க வைப்போம்

வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை! இருப்பினும் ஒரு சிறு ஆறுதல் என்ன தெரியுமா?

இன்றைய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி வருமான வரி உச்ச வரம்பில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளது ஒரு ஏமாற்றமே.

அமலாபாலை சந்தித்தது ஏன்? கைதான தொழிலதிபர் வாக்குமூலம்

பிரபல நடிகை அமலாபால் நேற்று தன்னை தொழிலதிபர் ஒருவர் ஆபாசமாக பேசியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அழகேசன் என்ற 40வயது தொழிலதிபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.

தனிநபர் வருமான வரி, ஜனாதிபதி சம்பள உயர்வு: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் இன்று காலை பாராளுமன்றத்தில் இந்த ஆண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் ஒருசில முக்கிய அம்சங்களை ஏற்கனவே பார்த்தோம்.