கொரோனா வார்டில் ஒரு கிளுகிளுப்பான காதல்: நர்ஸ்கள், டாக்டர்கள் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Wednesday,June 10 2020]

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சென்னையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஒரு இளைஞருக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அந்த வார்டில் பணிபுரியும் டாக்டர்கள், நர்ஸ்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்கள் ஒரே ஹாலில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை, உணவு உள்பட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வார்டில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் ஒருவரும் இளம்பெண் ஒருவரும் முதலில் நட்பாக தங்கள் குடும்ப விஷயங்கள், படித்த படிப்பு மற்றும் பிடித்தவை பிடிக்காதவைகள் குறித்து பேசியுள்ளனர்.,

ஒரு கட்டத்தில் இவர்களுடைய நட்பு காதலாக மாறி விட்டதாக தெரிகிறது. இதனை அங்கு பணிபுரியும் நர்ஸ்கள் கவனித்தபோதிலும் ‘சின்னஞ்சிறுசுகள்’ என கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். இந்த நிலையில் திடீரென இருவரும் மாயமாகிவிட்டதாக வெளிவந்த தகவல் நர்ஸ்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பின்னர் நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் மருத்துவமனை முழுவதும் தேடியபோது, ஒரு மறைவான இடத்தில் இருவரும் பேசி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதன்பின் இதுகுறித்து டாக்டர்களிடம் நர்ஸ்கள் புகார் அளிக்க, டாக்டர் அதிரடியாக அந்த இளம்பெண்ணை வேறு வார்டுக்கு மாற்றிவிட்டதாக தெரிகிறது. இதன்பின் நடந்த கூத்துதான் யாரும் எதிர்பாராதது. இளம்பெண்ணை வேறு வார்டுக்கு மாற்றிய டாக்டருக்கு முக்கிய பிரமுகரிடம் இருந்து ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் பெண் தனக்கு வேண்டியவர் என்றும், அவர் விரும்பும் வார்டுக்கு உடனே மாற்றவும் என்றும் அன்புக்கட்டளை வந்துள்ளது. இதனையடுத்து வேறு வழியில்லாமல், அந்த இளம்பெண் தற்போது மீண்டும் இளைஞர் இருக்கும் வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும் தற்போது இருவரும் மீண்டும் தங்கள் காதலை தொடர்வதாகவும் கூறப்படுகிறது

More News

அடுத்த படத்தின் டப்பிங்கை தொடங்குகிறார் சீயான் விக்ரம்

விக்ரம் நடிப்பில் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படமும், அஜய் ஞானமுத்து இயக்கிவரும் 'கோப்ரா' திரைப்படமும் கொரோனா பரபரப்பு முடிந்தவுடன் அடுத்த கட்ட படப்பிடிப்பு

விக்ரம் நடிக்கும் ஹிந்தி படம் குறித்த மாஸ் தகவல்

கோலிவுட் திரையுலகில் மாஸ் நடிகர்களாக இருப்பவர்கள் கூட பாலிவுட்டில் ஹிந்தி திரைப்படங்களில் ஜொலிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராகவா லாரன்ஸின் அடுத்தகட்ட நிதியுதவி குறித்த ஆச்சரியமான தகவல்

நடிகரும், நடன இயக்குனரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஏற்கனவே கொரோனா தடுப்பு நிதியாக ரூபாய் 4 கோடிக்கு மேல் கொடுத்துள்ளார் என்பது தெரிந்ததே.

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகளுக்கு தடையா? உயர்நீதிமன்றம் அதிரடி

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த காரணத்தினால் கடந்த சில வாரங்களாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் காலமானார்: பிறந்த நாளில் உயிரிழந்த சோகம்

கடந்த 2ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ அன்பழகன் சிகிச்சையின் பலனின்றி காலமானார். அவருக்கு வயது 62