விஜய்யை அடுத்து சூர்யாவுக்கு கிடைத்த பெருமை

  • IndiaGlitz, [Thursday,December 14 2017]

தளபதி விஜய் நடித்த 'தெறி திரைப்படம் ரிலீஸ் ஆனபோது முதல் நாள் முதல் காட்சி காணும் அனுபவத்தை பெண் ரசிகர்களுக்கும் வழங்கும் வகையில் முதன் முறையாக பெண்கள் மட்டும் அனுமதிக்கப்படும் முதல் நாள், முதல் காட்சி காரைக்குடியில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டது.

அந்த வகையில் விஜய்யை அடுத்து தற்போது இந்த பெருமைக்குரிய விஷயம் சூர்யா படத்திற்கு கிடைத்துள்ளது. ஆம், கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் ஒரு திரையரங்கில் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் பெண்களுக்கான ஒரு பிரத்யேக காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சிக்கான டிக்கெட்டுக்கான முன்பதிவுகளும் தொடங்கிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. தெலுங்கு மாநிலங்களை போலவே சூர்யாவுக்கு கேரளாவிலும் பெண் ரசிகைகள் அதிகரித்து வருவதை இந்த லேடீஸ் ஸ்பெஷல் காட்சி நிரூபணம் செய்துள்ளது.

வரும் பொங்கல் விருந்தாக வெளிவரவுள்ள இந்த படத்தில் சூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

More News

பலருக்கும் பசியாற்ற உதவியாக கஞ்சா கருப்பு பரிசளித்த ஆட்டோ..!

பிரபல நகைச்சுவை நடிகர் கஞ்சாகருப்பு, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரசிகர்களின் மனதை கவர்ந்த நிலையில் தற்போது அவரது மனிதாபிமான செயல் ஒன்று வெளிவந்து அவருடைய மதிப்பை உயர்த்தியுள்ளது

ஜெயம் ரவியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'டிக் டிக் டிக்' திரைப்படம் வெகுவிரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் அவர் அடுத்ததாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 'சங்கமித்ரா' படத்திற்கு விரைவில் தயாராகிறார்.

தீரன் பட பாணியில் ராஜஸ்தானில் கொலை செய்யப்பட்ட சென்னை காவல் ஆய்வாளர்

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் கொள்ளையடித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து துப்பு துலக்கிய மதுரவாயில் போலீசார்,

பாலா-துருவ் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

சீயான் விக்ரம் மகன் துருவ், தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன 'அர்ஜூன்ரெட்டி' படத்தின் ரீமேக்கில் அறிமுகமாகிறார் என்பதும் இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே

உதயநிதியின் அடுத்தபடம் குறித்த அறிவிப்பு

இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய உதயநிதி ஸ்டாலின் நடித்த 'இப்படை வெல்லும்' சமீபத்தில் வெளியாகிய நிலையில் அவர் தற்போது 'நிமிர்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.