03.03.2023 அன்று மிகப்பெரிய சர்ப்ரைஸ்: சிம்பு பட தயாரிப்பாளர் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,February 28 2023]

சிம்பு நடித்த திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் வரும் மார்ச் மூன்றாம் தேதி அன்று மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்திருப்பதாக அறிவித்துள்ளது.

சிம்பு நடிப்பில், கிருஷ்ணா இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’பத்து தல’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் மார்ச் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் புரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று மார்ச் மூன்றாம் தேதி வெளியாகும் என ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தனது டுவிடட்ர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அனேகமாக மார்ச் மூன்றாம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து மார்ச் மூன்றாம் தேதிக்காக சிம்புவின் ரசிகர்களுக்கு காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்பட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படம், ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை அடுத்து சிம்புவின் ஹாட்ரிக் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சீரியலுக்கு வரும் விஜய் தந்தை.. ராதிகா தான் ஜோடியா? டைட்டில் அறிவிப்பு..!

தமிழ் திரை உலகில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனரும் தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் முதல் முறையாக ஒரு தொலைக்காட்சி தொடரில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குக் வித் கோமாளி.. மணிமேகலை விலகியதற்கு காரணம் இதுதானா?

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை சமீபத்தில் விலகியதாக அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் அவருடைய விலகலுக்கு என்ன காரணம் என்பது குறித்து சமூக  ஊடகங்களில் பல்வேறு செய்திகள் பரவி

பெரிய அதிசயங்கள் நடப்பதற்கு முன் சின்ன தடங்கல் வந்து கொண்டே இருக்குமாம்.. விக்னேஷ் சிவனின் தத்துவங்கள்..

 இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு சில தத்துவங்களை பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நமீதாவை இதுவரை யாரும் சரியாக பயன்படுத்தவில்லை.. கணவர் வீரேந்திர சவுத்ரி ஆதங்கம்..!

 நடிகை நமீதாவை இதுவரை யாரும் சரியாக பயன்படுத்தவில்லை என்றும் அவரை  கிளாமருக்காக கமர்சியலாக மட்டுமே பயன்படுத்தினார்கள் என்றும் அவரது நடிப்பு திறமையை யாரும் வெளிப்படுத்தவில்லை

நடுரோட்டில் ஆண் நண்பருடன் சண்டை: சிவராத்திரியில் ஈஷா மையத்திற்கு வந்த நடிகையால் பரபரப்பு..!

 சிவராத்திரி கொண்டாட கோவை அருகே உள்ள ஈஷா மையத்திற்கு வந்த நடிகை ஒருவர் நடுரோட்டில் தனது ஆண் நண்பருடன் சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.