close
Choose your channels

கமல்ஹாசன் கையில் ஆயுதத்தை கொடுத்த பிரபல நடிகை

Monday, February 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலையில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து ஆற்றிய உரை, உலகெங்கும் உள்ள தமிழர்களை நிமிரச்செய்துள்ளது. இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும், தொலைக்காட்சி நடிகையுமான ஐஸ்வர்யா பிரபாகர், கமல்ஹாசனை வித்தியாசமான தோற்றத்தில் வரைந்து அதில் அவரிடம் ஆட்டோகிராபும் வாங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தபோது, 'கமல்ஹாசன் அவர்களை அழைத்து உரையாற்ற  வைத்த ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்க தமிழ் சங்கங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் கமல்ஹாசன் அவர்களை இதற்கு முன்னர் ஓரிரு முறை சந்தித்துள்ளேன். அவரது கவர்ச்சி மற்றும் அறிவு ஒவ்வொரு முறை சந்திக்கும்போது நம்மை ஆச்சரியப்படுத்தும். அவர் அரசியலுக்கு வருவது குறித்து அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

அரசியலுக்கு வருகை தரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரது படத்தை முருகக்கடவுள் போல் வரைந்து அவரது கையில் மைக்ரோபோன் மற்றும் வேல் என்ற ஆயுதம் இருப்பது போன்று வரைந்தேன். அவர் ஒரு பகுத்தறிவாளராக இருந்தாலும் என்னுடைய ஓவியத்தை ரசித்து அதில் ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார்' என்று நடிகை ஐஸ்வர்யா பிரபாகர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment