கமல்ஹாசன் கையில் ஆயுதத்தை கொடுத்த பிரபல நடிகை

  • IndiaGlitz, [Monday,February 12 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலையில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து ஆற்றிய உரை, உலகெங்கும் உள்ள தமிழர்களை நிமிரச்செய்துள்ளது. இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும், தொலைக்காட்சி நடிகையுமான ஐஸ்வர்யா பிரபாகர், கமல்ஹாசனை வித்தியாசமான தோற்றத்தில் வரைந்து அதில் அவரிடம் ஆட்டோகிராபும் வாங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தபோது, 'கமல்ஹாசன் அவர்களை அழைத்து உரையாற்ற  வைத்த ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்க தமிழ் சங்கங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் கமல்ஹாசன் அவர்களை இதற்கு முன்னர் ஓரிரு முறை சந்தித்துள்ளேன். அவரது கவர்ச்சி மற்றும் அறிவு ஒவ்வொரு முறை சந்திக்கும்போது நம்மை ஆச்சரியப்படுத்தும். அவர் அரசியலுக்கு வருவது குறித்து அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

அரசியலுக்கு வருகை தரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரது படத்தை முருகக்கடவுள் போல் வரைந்து அவரது கையில் மைக்ரோபோன் மற்றும் வேல் என்ற ஆயுதம் இருப்பது போன்று வரைந்தேன். அவர் ஒரு பகுத்தறிவாளராக இருந்தாலும் என்னுடைய ஓவியத்தை ரசித்து அதில் ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார்' என்று நடிகை ஐஸ்வர்யா பிரபாகர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

More News

ஏலத்துக்கு வருகிறது ரஜினி-கமல் பட தயாரிப்பு நிறுவனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை, முத்து, உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த புன்னகை மன்னன் உள்பட ஏராளமான வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் கவிதாலயா நிறுவனம்.

கேங்ஸ்டர் வேடத்தில் குருசோமசுந்தரம் நடித்த படம்

பிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோஜ்பீதா என்பவ்ர் 'வஞ்சகர் உலகம்' என்ற த்ரில் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

அமலாபால் பாலியல் தொல்லை விவகாரத்தில் திடீர் திருப்பம்

அமலாபால் அவர்களிடம் சென்னை தொழிலதிபர் ஒருவர் ஆபாசமாக பேசியதாக சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்னை தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்தது.

ஹார்வர்டு பல்கலையில் கமல் பேசியதன் முழு தொகுப்பு

நடிகர் கமல்ஹாசன் நேற்று ஹார்வர்டு பல்கலையில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து பேசிய உரை பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அவர் பேசியதன் முழு தொகுப்பு தற்போது வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தள வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சத்யராஜ் மகள்

சத்யராஜ் மற்றும் அவரது மகன் சிபிராஜ் ஆகிய இருவரும் கோலிவுட் திரையுலகில் பிசியாக நடித்து வரும் நிலையில் சத்யராஜின் மகள் திவ்யாவும் சினிமாவில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.