எதிர்பாராமல் நடந்த கார் விபத்து.. சம்பவ இடத்திலேயே பிரபல சீரியல் நடிகை பலி..!

  • IndiaGlitz, [Monday,May 13 2024]

எதிர்பாராமல் நடந்த கார் விபத்தில் பிரபல சீரியல் நடிகை சம்பவ இடத்திலேயே பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல கன்னட சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் என்பவர் கன்னடத்தில் மட்டுமின்றி தெலுங்கில் ’திரினாயினி’ என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பதும் இந்த சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ’மாரி’ என்ற சீரியலின் ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் பவித்ரா ஜெயராம் குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்த நிலையில் அவர்கள் சென்ற கார் மெகபூபா நகர் என்ற பகுதி அருகே சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் நடிகை பவித்ரா ஜெயராமன் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் அவரது குடும்பத்தினர் மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பவித்ரா ஜெயராமின் மரணம் கன்னடம் மற்றும் தெலுங்கு சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஆழ்த்தி உள்ளது. இதனை அடுத்து நேரில் சென்று பலர் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கன்னட சீரியல் மட்டுமின்றி இவர் ஒரு கன்னட படத்திலும் நடித்திருக்கிறார் என்பதும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில் எப்படி ஒரு பரிதாபமான முடிவு ஏற்பட்டுள்ளது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

More News

கமல்ஹாசன் கொடுத்த பெரிய ஆஃபர்.. ஆனாலும் 'பிரேமலு' இயக்குனரின் அதிரடி முடிவு..!

உலக நாயகன் கமல்ஹாசன் தனது நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை 'பிரேமலு' இயக்குனருக்கு கொடுத்த நிலையில் அதை ஏற்றுக் கொள்ளாமல் அவர் எடுத்த அதிரடி முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மிக வேகமாக பரவும் ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வதந்தி.. அமைதி காக்கும் தம்பதிகள்..!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்யப் போவதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வதந்தி பரவிக் கொண்டிருக்கும்

நடிகர் விஜய் எம்ஜிஆர் போல.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும் காரணம்..!

நடிகர் விஜய், எம்ஜிஆர் போல தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்து வருகிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்

சென்னையில் ஐபிஎல் போட்டியை கண்டு ரசிக்கும் அஜித் குடும்பம்.. க்யூட் புகைப்படம்..!

சென்னையில் இன்று ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியை அஜித் குடும்பம் கண்டு ரசிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? தமிழ் சினிமா ஹீரோ ஆவார்களா?

நடிகை லைலா தனது இரண்டு மகன்கள் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில் லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிப்பார்களா?