close
Choose your channels

திருப்பதியில் முடி காணிக்கை செலுத்திய பின்னணி பாடகி.. பக்தி பரவசத்துடன் பாடிய நாராயண பாடல்..!

Thursday, June 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பழம்பெரும் பின்னணி பாடகி திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி பய பக்தி உடன் நாராயணா பாடலை பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பழம்பெரும் பின்னணி பாடகி பி சுசிலா தமிழ் மட்டும் இன்றி பல இந்திய மொழிகளில் பாடியுள்ளார் என்பதும் அவரது பாடல்கள் கடந்த 50 ஆண்டுகளாக இசை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

60கள், 70 கள், 80 களில் இருந்த பிரபல நடிகைகள் அனைவருக்கும் பி சுசிலா பின்னணி குரல் கொடுத்துள்ளார் என்பதும் தற்போது வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருக்கும் சுசீலா சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் சென்று சாமி தரிசனம் செய்து முடி காணிக்கை செலுத்தி உள்ளார்.

அதன்பின் ஏழுமலையானை வழிபட்ட பி சுசீலா, இரண்டு பேர் துணையுடன் நாராயண மந்திரம் என்ற பாடலை பாடிக்கொண்டே நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை அடுத்து இந்த வயதில் கூட சுசிலா அம்மாவின் குரல் இனிமையாக இருக்கிறது என்றும் அவர் நீண்ட ஆயுளோடு உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பி சுசீலா முடி காணிக்கை செலுத்திய பின் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.