'மூன்று முடிச்சு' தொடரில் இணையும் இன்னொரு பிரபல நடிகை.. எகிறுமா டிஆர்பி?

  • IndiaGlitz, [Tuesday,September 17 2024]

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு தொடர், தொடங்கிய இரண்டே வாரங்களில் டிஆர்பியில் ஐந்து இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது. மேலும், தற்போது இந்த தொடரில் இன்னொரு பிரபல நடிகை இணைந்துள்ளதால், டிஆர்பியில் இன்னும் முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் மூன்று முடிச்சு தொடரில் நாயகனாக நியாஸ், நாயகியாக சுவாதி கோண்டே ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த தொடர் ஆரம்பித்த சில நாட்களிலேயே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நந்தன் சி முத்தையா என்பவர் இந்த தொடரை இயக்குகிறார். இவர், விஜயகாந்த் நடித்த ரமணா படத்தின் கதை ஆசிரியரும், தென்னவன் படத்தின் இயக்குனரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ’மூன்று முடிச்சு’ சீரியலில் நடிகை சுவாதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், தற்போது பூவா தலையா தொடரில் நடித்த தர்ஷனாவும் இந்த தொடரில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே தொடரில் இரண்டு பிரபல நடிகைகள் நடிப்பதால் இந்த தொடருக்கு கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

இன்று பெரியார், மோடி பிறந்த நாள்.. விஜய் வாழ்த்து சொன்னது யாருக்கு தெரியுமா?

இன்று தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவருக்கும் பிறந்த நாள் என்ற நிலையில், விஜய் தனது சமூக வலைத்தளத்தில் ஒருவருக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2ஆம் பாகமாகிறது மாரி செல்வராஜின் சூப்பர் ஹிட் படம்..அவரே தெரிவித்த தகவல்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான "வாழை" திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது. தமிழகம் முழுவதும் இப்படம் மிகப்பெரிய வசூலை குவித்தது

உதை கிடைக்கு பாத்துக்க என கமலிடமும், வெய்யில் தாங்கமுடியலபா சீக்கிரம் ஷூட் முடி என ரஜினியிடமும் சொன்ன சுமித்ரா....

நடிகை சுமித்ரா கேரள திருச்சூரில் பிறந்தவர். 1970 களில் நடிகையாக முன்னணி ஹீரோக்களுடன் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர்.

நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2' இயக்குனர் இவர்தான்: இன்னொரு ரூ.100 கோடி வசூல் உறுதியா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம், ஆர்.ஜே பாலாஜியின் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளியாகி சிறப்பான வரவேற்பை வசூலையும் பெற்றது.

ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார்.. அதிரடி நடவடிக்கை எடுத்த துணை முதல்வர் பவன் கல்யாண்..!

பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, ஜனசேனா கட்சியின் செயல்பாடுகளில் இருந்து விலக வேண்டும் என  பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.