சிறுமி மித்ராவுக்கு செலுத்தப்பட்ட ரூ.16 கோடி மதிப்பிலான ஊசிமருந்து: மீண்டு வர வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Saturday,August 07 2021]

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் என்ற பகுதியை சேர்ந்த சிறுமி மித்ராவுக்கு அரிய வகை நோய் இருந்ததை அடுத்து அவருக்கு ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி செலுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சற்று முன் அந்த குழந்தைக்கு ரூ.16 கோடி மதிப்புடைய ஊசிமருந்து செலுத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

நாமக்கல் மாவட்டம் சதீஷ்குமார்-பிரியதர்ஷினி தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை மித்ரா. இவருக்கு அரியவகை முதுகு தண்டுவட சிதைவு நோய் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு ரூபாய் 16 கோடி மதிப்பிலான ஊசி செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர்.

இதனையடுத்து சமூக வலைதளங்கள் மூலம் அந்த குழந்தைக்காக நிதி திரட்டப்பட்டது. தமிழக அரசும் இந்த குழந்தைக்கு தேவையான மருந்து இறக்குமதி செய்ய வரியை நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அந்த குழந்தைக்கு தேவையான மருந்தை இறக்குமதி செய்வதற்கான வரியை நீக்கினார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் இந்த செய்தி பரவியது என்பதும் குழந்தைக்காக திரையுலகினர் உள்பட ஏராளமானோர் நிதி அளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரூபாய் 16 கோடி நிதி மூலம் சேர்ந்ததை அடுத்து சுவிட்சர்லாந்திலிருந்து இந்த குழந்தைக்கு ஊசி மருந்து வரவழைக்கப்பட்டது. அந்த மருந்து சற்றுமுன் சிறுமி மித்ராவுக்கு செலுத்தப்பட்ட தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முதுகு தண்டுவட சிதைவு என்று அறிய நோய் மூலம் பாதிக்கப்பட்ட சிறுமி மித்ராவுக்கு இந்த ஊசி செலுத்தப்பட்டதை அடுத்து அவர் விரைவில் மீண்டு வர ஏராளமானோர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் இணைந்த மேலும் மூன்று பிரபலங்கள்!

தளபதி விஜய் நடித்துவரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தில் நடித்து வரும் நட்சத்திரங்கள் குறித்த தகவலை

பெப்சி தொழிலாளர்கள் இல்லாமலும் படப்பிடிப்பு நடத்துவோம்: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி அறிவிப்பு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி ஒப்பந்தம் இடையே செய்யப்பட்ட இருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாகவும் இனி பெப்சி தொழிலாளர்கள் இல்லாமலும் படப்பிடிப்பு நடத்துவோம்

இந்தியாவுக்கு முதல் தங்கம்: அசத்தினார் நீரஜ் சோப்ரா!

ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளதை அடுத்து இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்!

ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளதை அடுத்து ஒட்டுமொத்த இந்தியாவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளது. 

மனித பற்கள்....! வித்தியாசமான தோற்றுத்துடன் இருக்கும் ஆட்டுத்தலை மீன்.....!

வித்தியாசமான தோற்றம் மற்றும் மனித பற்களைக் கொண்ட மீன் ஒன்று அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.