பயில்வான் ரெங்கநாதன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்: என்ன காரணம்?

  • IndiaGlitz, [Friday,March 25 2022]

நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக நகைச்சுவை நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகைகளின் அந்தரங்கம் குறித்து பல்வேறு தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார். இதற்கு பல நடிகைகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர் என்பதும் ஒரு சிலர் நேரடியாகவே அவரிடம் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் பயில்வான் ரங்கநாதன் தான் உண்மையைத்தான் சொல்கிறேன் என்றும் தான் சொல்லும் ஒவ்வொரு தகவலுக்கும் ஆதாரம் உள்ளது என்றும் கூறி வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பெண்கள் குறித்து தரக்குறைவாக பதிவு செய்வதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.