close
Choose your channels

பாடகர் மனோவின் இரு மகன்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு.. என்ன காரணம்?

Wednesday, September 11, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் பிரபல பாடகர் மனோவின் இரண்டு மகன்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இசை ஞானி இளையராஜா உள்பட பல இசையமைப்பாளர்களின் பாடல்களை பாடியவர் மனோ என்பதும் எஸ்பிபி க்கு இணையாக இவர் பாடி வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் மனோவின் மகன்கள் ரஃபிக் மற்றும் சாஹீர் ஆகிய இருவர் மீது வளசரவாக்கம் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வழியாக உள்ளன.

மனோவின் இரு மகன்கள் மது போதையில் 16 வயது சிறுவன் உள்பட இரண்டு பேரை தாக்கியதாகவும் இதனை அடுத்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் புறப்படுகிறது.

ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இருப்பதாகவும் தற்போது இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்கள் இருவரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வளசரவாக்கத்தில் உள்ள மனோவின் வீட்டில் காவல்துறையினர் சென்று விசாரணை செய்ததாகவும் அப்போது அவருடைய மகன்கள் இருவரும் வீட்டில் இல்லை என்றும் கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment