காவலர் தாக்கப்பட்ட விவகாரம்: சீமான் மீது கொலை முயற்சி வழக்கு

  • IndiaGlitz, [Wednesday,April 11 2018]

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவருடைய கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சிஎஸ்கே பனியன் போட்ட ரசிகர்களை தாக்கிய வீடியோவும், காவலர்களை தாக்கிய வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக சீருடை அணிந்த காவலர்களை தாக்கியது வன்முறையின் உச்சகட்டம் என்று ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய போராட்டத்தின்போது காவலரை தாக்கியதாக சீமான் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் நேற்றைய போராட்டத்தில் ஈடுபட்ட வைரமுத்து, பாரதிராஜா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

மேலும் சாலை மறியல், மைதானத்திற்குள் காலணி வீச்சு உள்ளிட்ட போராட்டங்கள் தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன,