close
Choose your channels

'காப்பான்' படத்திற்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Thursday, September 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ’காப்பான்’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, அதன் பிரமோஷன் பணிகளும் ஜெட் வேகத்தில் நடந்து வருவது தெரிந்ததே இந்த நிலையில் இந்த படத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை குரோம்பேட்டை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கடந்த 2014ஆம் ஆண்டு சரவெடி என்ற தலைப்பில் நான் எழுதிய கதையைத் தான் இயக்குநர் கேவி ஆனந்த் ’காப்பான்’ என்ற பெயரில் திரைப்படம் எடுத்திருப்பதாகவும், இந்த எனவே ’காப்பான்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இந்த மனுவுக்கு பதிலளித்த லைக்கா நிறுவனம் ’சரவெடி’ கதை வேறு என்றும், ‘காப்பான்’படத்தின் கதை வேறு என்றும் பதிலளித்தது. அதேபோல் இயக்குனர் கேவி ஆனந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ’மனுதாரரை தான் எந்த காலத்திலும் சந்தித்தது இல்லை என்றும் அடையாளம் தெரியாத யாரிடம் தான் கதை கேட்கும் வழக்கம் இல்லை என்றும் கூறினார். இதனையடுத்து இந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்; இதனையடுத்து ‘காப்பான்’ திரைப்படம் திட்டமிட்டபடி செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாவது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment