close
Choose your channels

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு: பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு: 

Tuesday, June 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித், சோழமன்னர் ராஜராஜ சோழனை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் அவருக்கு கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் பா.ரஞ்சித் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதி, மத, இன உணர்வுகளை தூண்டுதல், கலகம் செய்ய தூண்டுதல் ஆகிய இரண்டு பிரிவில் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக தஞ்சையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஞ்சித், 'ராஜராஜ சோழன் காலத்தில் தான் தலித் இடங்கள் அபகரிக்கப்பட்டதாகவும், தலித் பெண்கள் தேவதாசிகளாக ஆக்கப்பட்டதாகவும், தலித்துக்கள் பறிகொடுத்த நிலங்களை மீட்க தலித் அமைப்புகள் ஒன்று சேர வேண்டும் என்றும் பேசியதாக வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன.

இதனையடுத்து தஞ்சையை சுற்றியுள்ள பல பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment