ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு: பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு: 

  • IndiaGlitz, [Tuesday,June 11 2019]

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித், சோழமன்னர் ராஜராஜ சோழனை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் அவருக்கு கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் பா.ரஞ்சித் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதி, மத, இன உணர்வுகளை தூண்டுதல், கலகம் செய்ய தூண்டுதல் ஆகிய இரண்டு பிரிவில் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக தஞ்சையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஞ்சித், 'ராஜராஜ சோழன் காலத்தில் தான் தலித் இடங்கள் அபகரிக்கப்பட்டதாகவும், தலித் பெண்கள் தேவதாசிகளாக ஆக்கப்பட்டதாகவும், தலித்துக்கள் பறிகொடுத்த நிலங்களை மீட்க தலித் அமைப்புகள் ஒன்று சேர வேண்டும் என்றும் பேசியதாக வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன.

இதனையடுத்து தஞ்சையை சுற்றியுள்ள பல பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

கிரேஸி மோகன் குறித்த பதிவிற்கு வருத்தம் தெரிவித்த தனுஷ் தந்தை!

நடிகர், வசனகர்த்தா, நாடக ஆசிரியர் கிரேசி மோகன் நேற்று காலமானதை அடுத்து திரையுலகமே சோகக்கடலில் மூழ்கியிருந்தது. திரைலகினர் அனைவரும் கிரேஸி மோகனுக்கு சமூக வலைத்தளங்கள்

ஓடும் காரில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண்: குடும்பத்துடன் கணவர் தலைமறைவு

ஓடும் காரில் இருந்து ஒரு பெண்ணை அவரது கணவரும் கணவரின் குடும்பத்தார்களும் தள்ளிவிடப்பட்ட சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

இயக்குனர்களை அவமதிக்க வேண்டாம்: வடிவேலுக்கு சமுத்திரக்கனி கண்டனம்

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2' படத்தின் பிரச்சனை கடந்த சில வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த வடிவேலு,

'கொலையுதிர்க்காலம்' தயாரிப்பாளருக்கு விக்னேஷ்சிவன் அனுப்பிய தகவல்!

நடிகை நயன்தாரா நடித்த 'கொலையுதிர்க்காலம்' திரைப்படத்தின் புரமோஷன் விழா ஒன்று சமீபத்தில் நடைபெற்றபோது அந்த விழாவில் நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி பேசிய சர்ச்சைக்குரிய கருத்தால்

விஜய்சேதுபதி-ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, 'கனா' நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் ஏற்கனவே ரம்மி, 'பண்ணையாரும் பத்மினியும், 'இடம் பொருள் ஏவல்' மற்றும்  'தர்மதுரை' ஆகிய திரைப்படங்களில் ஜோடியாக