சுஷாந்த்சிங் தற்கொலை விவகாரம்: பிரபல நடிகை மீது வழக்குப்பதிவு

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பாலிவுட் திரை உலகையே உலுக்கியது. மேலும் அவருடைய தற்கொலைக்கு பாலிவுட் பிரமுகர்கள் சிலர் கொடுத்த டார்ச்சர் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில் பீகார் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. கரன்ஜோகர், சல்மான் கான், சஞ்சய் லீலா பன்சாலி உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் சுஷாந்த்சிங் தற்கொலைக்கு காரணம் என நடிகை ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிகார் மாநிலத்தைச் சேர்ந்த குந்தன் குமார் என்பவர் பீகார் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை பதிவு செய்து உள்ளார் .அவர் சுஷாந்த்சிங் தற்கொலைக்கு காரணம் அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி தான் என்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சுஷாந்த்சிங் தற்கொலை குறித்து ஏற்கனவே நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம் மும்பை போலீசார் பலமணி நேரம் விசாரணை செய்தனர் என்பதும், சுஷாந்த்சிங் குறித்து அவர் பல்வேறு தகவல்கள் போலீசார்களிடம் கூறியதாகவும் தகவல்கள் வந்த நிலையில் தற்போது அவர் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லையா? கமல்ஹாசன்

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியான நிலையில் முதல் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி

தமிழக கொரோனா பாதிப்பில் மீண்டும் புதிய உச்சம்:பிற மாவட்டங்களிலும் பரவுவதால் பதட்டம்

தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் இரண்டாயிரத்தை தாண்டியது என்பதும் குறிப்பாக நேற்று 2500ஐ தாண்டியது என்றும் வெளிவந்த செய்தியை பார்த்தோம்.

சீன எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவிக்கு துணை கலெக்டர் பதவி: முதல்வர் அசத்தல்

சமீபத்தில் இந்திய எல்லையில் சீன ராணுவ வீரர்கள் திடீரென அத்துமீறி ஊடுருவி வந்ததால் அவர்களை தடுக்கும் முயற்சியில் இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.

இவரைத்தான் திருமணம் செய்ய போகிறேன். கணவருக்கு ஷாக் கொடுத்த பிக்பாஸ் ஆர்த்தி

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகைகளில் ஒருவரான ஆர்த்தி, கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் கணேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்

உலகின் 10 பணக்காரர் பட்டியலில் இணைந்த இந்தியர்: குவியும் வாழ்த்துக்கள்

உலக பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி முதல் பத்து இடங்களுக்குள் இணைந்துள்ளது இந்தியாவிற்கே பெருமை தரக்கூடியதாக கருதப்படுகிறது