நடிகை பார்வதி நாயர், 'அயலான்' தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன நடந்தது?

  • IndiaGlitz, [Saturday,September 21 2024]

பிரபல நடிகை பார்வதி நாயர் மற்றும் அயலான் படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் உட்பட ஏழு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் உள்ளன.

கடந்த 2022ஆம் ஆண்டு பார்வதி நாயர் வீட்டில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனதாக, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்த புகாரில், தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், சுபாஷ் சந்திரபோஸ், நடிகை பார்வதி நாயர் மற்றும் தயாரிப்பாளர் ராஜேஷ் உட்பட ஏழு பேர் மீது புகார் அளித்தார். அந்த புகாரில், தன்னை வீட்டில் அறையில் அடைத்து வைத்து, பார்வதி நாயர் உள்பட ஏழு பேர் தன்னை தாக்கி துன்புறுத்தியதாக கூறியிருந்தார்.

இந்த புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்பட்ட நிலையில், சுபாஷ் சந்திரபோஸ் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் அடிப்படையில், நடிகை பார்வதி நாயர், தயாரிப்பாளர் ராஜேஷ், அருள்முருகன், இளங்கோவன், செந்தில், அஜித், பாஸ்கர் உள்பட ஏழு பேர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

 

More News

முன்னாள் பிரதமருடன் படித்தவர் அமிதாப்பச்சன்: ரஜினிகாந்த் சொன்ன தகவல்..!

"வேட்டையன்' படத்தின் இசை வெளியீட்டின் போது, நடிகர் அமிதாப் பச்சன் முன்னாள் பிரதமருடன் படித்தவர் என்ற ரஜினிகாந்த் கூறிய தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து ரஜினிகாந்த் மேலும்

'காக்கா' கதையை அடுத்து 'கழுதை' கதை சொன்ன ரஜினிகாந்த்: வேட்டையன் விழாவில் சுவாரஸ்யம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் ரஜினிகாந்த் சொன்ன கழுதை கதை இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது:

என்கவுண்டர்ங்கிற பேருல கொலை பண்றதுதான் ஹீரோயிஸம்? 'வேட்டையன்' டீசர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இன்று சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

'வேட்டையன்' அமிதாப்புக்கு ஏஐ டெக்னாலஜி மூலம் பின்னணி குரலா? யார் பேசியது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது

காட்டுல புலி வரும்போது காடே சைலண்ட் ஆயிரும்: 'பேட்ட ராப்' டிரைலர்..!

பிரபுதேவா நடித்த "பேட்ட ராப்" என்ற திரைப்படம் வரும் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்கான டிரைலர் சற்று முன்பு வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.