நடிகை பாலியல் புகார்.. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு.. பிரபல நடிகர் கைதா?

  • IndiaGlitz, [Thursday,August 29 2024]

நடிகை அளித்த பாலியல் புகார் காரணமாக ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் பிரபல நடிகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மலையாள திரையுலகில் கடந்த சில நாட்களாக நடிகைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டு திடுக்கிட வைத்துள்ள நிலையில் பிரபல நடிகர் மற்றும் எம்எல்ஏ முகேஷ் மீதும் நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

இதனை அடுத்து நடிகையின் புகாரின் அடிப்படையில் கேரள போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் முகேஷ் மீது இன்று காலை வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தன்னை கைது செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றத்தில் முகேஷ் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 3 நாட்கள் அவரை கைது செய்ய தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் முகேஷ் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் இன்று காலை முதல் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏவாக இருக்கும் முகேஷ் உள்பட நான்கு மலையாள நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில் இந்த குற்றச்சாட்டை அவர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.