'சூர்யா 44' படப்பிடிப்பில் விபத்து.. சூர்யாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவரின் அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Friday,August 09 2024]

கடந்த சில நாட்களாக ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வரும் நிலையில் திடீரென இன்று நடந்த விபத்தில் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமான் தீவுகளில் நடந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஊட்டியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் சூர்யா உள்பட பல முக்கிய நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவல் படி ’சூர்யா 44’ படப்பிடிப்பில் ஒரு சண்டைக் காட்சியின் போது சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சூர்யாவிடம் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதனை அடுத்து சூர்யா முழு ஓய்வு எடுக்க இருப்பதாகவும் சூர்யா இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு மட்டும் சில நாட்கள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், ஜாக்சன் கலை இயக்கத்தில், பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைனில், ஜெயிக்கா ஸ்டண்ட் இயக்கத்தில் சபிக் முகமது அலி படத்தொகுப்பில் ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகவுள்ளது. மேலும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன்பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

More News

திருப்பதி பெருமாள் ரகசியங்கள்: ஸ்ரீகவி சொல்லும் அற்புத தத்துவங்கள்

ஆன்மீக சிந்தனையாளர் ஸ்ரீகவி அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் திருப்பதி பெருமாள் மற்றும் திருமலை நம்பி பற்றி ஆழமாக ஆராய்ந்துள்ளார்.

அர்ஜெய்- லிங்கா கூட்டணியில் உருவாகும் கேங்ஸ்டர் ஃபேண்டஸி

தமிழ் திரையுலகில் புதிய முயற்சியாக உருவாகும்  கேங்ஸ்டர் ஃபேண்டஸி படத்தை ஸ்மால் ஃபாக்ஸ் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கிறது.

சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொன்ன வெங்கட் பிரபு.. இதுதான் காரணம்..!

இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்து செய்துள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூரியிடம் கதை சொன்ன ஜேசன் சஞ்சய்.. கதை கேட்டவுடன் சூரி பதில் என்ன தெரியுமா?

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தின் கதையை சூரியிடம் சொன்னதாகவும் அந்த கதையை கேட்டு சூரி சொன்ன பதில் அனைவருக்கும் ஆச்சரியத்தை

விஜய்சேதுபதியை உதைத்தால் பரிசு.. அறிவித்த அரசியல்வாதிக்கு நீதிமன்றம் தண்டனை..!

விஜய் சேதுபதியை உதைத்தால் 1001 ரூபாய் பரிசு தருவேன் என அரசியல்வாதி ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் இது குறித்த வழக்கில் நீதிமன்றம்