close
Choose your channels

'அறம்' இயக்குனரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பில் விபத்து: பரிதாபமாக பலியான உயிர்..!

Wednesday, December 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’அறம்’ படத்தை இயக்கிய கோபி நயினார் இயக்கத்தில் உருவாகி வரும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

’அறம்’ படத்தை இயக்கிய கோபி நயினார் தற்போது ’அகரம் காலனி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள செங்குன்றம் என்ற பகுதியில் அரிசி ஆலையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் லைப் மேன் ஆக பணிபுரிந்த சண்முகம் என்பவர் திடீரென எதிர்பாராமல் ஏற்பட்ட மின்சார விபத்தில் தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரேத பரிசோதனைக்கு உடலை அனுப்பி விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் ’அகரம் காலனி’ படக்குழுவினர்களை பெரும் அதிர்ச்சி கொள்ளாக்கி உள்ளதாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment