தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி வந்தால் மட்டும் போதாது.. இதையும் செய்ய வேண்டும்: 80s நடிகை பேட்டி..!

  • IndiaGlitz, [Monday,January 29 2024]

தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி வந்தால் மட்டும் போதாது, தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை வழங்க வேண்டும் என்று 80களில் பிரபலமாக இருந்த நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 80களில் பிரபலமாக இருந்தால் நடிகைகளில் ஒருவர் ரோகிணி. பிரபல நடிகர் ரகுவரனின் மனைவியான இவர் பல பிரபலங்கள் உடன் இணைந்து நடித்துள்ளார் என்பதும் தற்போதும் கூட அவர் பிசியான நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் ’வேட்டையன் உள்பட ஒரு சில படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சென்னை மாரத்தான் போட்டிகளை தொடங்கி வைத்த ரோகிணி அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பிரதமரின் தமிழ்நாடு பயணம் குறித்து பேசிய அவர் ’பிரதமர் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வருவது மட்டுமின்றி மாநிலத்திற்கு தேவையான திட்டத்தையும் வழங்க வேண்டும். பிரதமர் ஒவ்வொரு முறையும் வரும்போது பிரதமர் என்ற பதவிக்கு நாம் மரியாதை கொடுத்து அவரை வரவேற்கிறோம். அதேபோல் அவர் தமிழகத்திற்கு தேவையான அனைத்தையும் செய்தால் நன்றாக இருக்கும், சும்மா வந்து பார்த்துவிட்டு போவதால் எந்த பலனும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ’தாய் மொழியில் கல்வி பயில்வது மிகவும் முக்கியமானது என்றும் தாய் மொழியில் கற்பித்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும் என்றும் அனைவரும் தாய் மொழியை உயர்த்தி பிடித்தாலே அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் கிடைக்கும்’ என்றும் அவர் தெரிவித்தார்

More News

வெங்கட் பிரபுவை காணவில்லை.. விஜய் பட வில்லன் நடிகர் பதிவால் பரபரப்பு..!

வெங்கட் பிரபுவை காணவில்லை என விஜய் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் ரக்சிதா நடிக்கும் படம் பெண்களுக்கு எதிரானதா? 'எக்ஸ்ட்ரீம்' குறித்து இயக்குனர் ராஜவேல்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ரக்சிதா மகாலட்சுமி நாயகி ஆக நடிக்கும் திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ள நிலையில் இந்த படம்

கமல்-எச் வினோத் படத்திற்கு இன்னும் உயிர் இருக்குதா? புதிய தகவல்..!

கமல்ஹாசன் நடித்து, தயாரிக்கும் ஒரு திரைப்படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் சமீபத்தில் இந்த படம் டிராப் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ஊத்திக்கொடுத்த மலேசிய மாமா.. மாட்டி கொண்ட முத்து.. 'சிறகடிக்க ஆசை'யில் திடீர் திருப்பம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த  சீரியலில் தற்போது மலேசிய மாமாவுடன் அண்ணாமலை குடும்பத்தினர்

ஜெயம் ரவியின் 'சைரன்' படத்தின் ஓடிடி+சாட்டிலைட் பிசினஸ்: இத்தனை கோடியா?

ஜெயம் ரவி நடித்த 'சைரன்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த படம் பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம்.