சென்னையில் இன்றும் 500க்கும் மேல் கொரோனா பாதிப்பு: 5000ஐ நெருங்குவதால் பரபரப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 500க்கும் மேற்பட்டவர்கள் குறிப்பாக சென்னையில் மிக அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை சற்றுமுன் தெரிவித்துள்ளது.

இதன்படி தமிழ்நாட்டில் இன்று மட்டும் 716 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 8718ஆக உயர்ந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 716 பேர்களில் சென்னையில் மட்டும் 510 பேர்கள் என்றும் இதனை அடுத்து சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4882ஆக உயர்ந்துள்ளது என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 11,788 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 266,687 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 83 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து தமிழகத்தில் மொத்தம் 2,134 பேர் குணமாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

அதேபோல் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 8 பேர் பலியாகி இருப்பதாகவும் இதனை அடுத்து தமிழகத்தில் மொத்த பலி 61ஆகஅதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

தமிழகத்தின் நிரந்தர முதல்வர் நீங்கள் தான்: எடப்பாடியாருக்கு நடிகர்-அரசியல்வாதி வாழ்த்து

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்பட பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ரியல் ஹீரோக்களிடம் ஆட்டோகிராப் வாங்குங்கள்: சூரி வேண்டுகோள்

இன்றைய நிலைகளில் ரியல் ஹீரோக்கள் காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தான். எனவே அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கி அவர்களை கெளரவப்படுத்துங்கள்

ஊரடங்கு விடுமுறையில் தமிழ் கற்கும் பிரபல பாலிவுட் நடிகை!

பிரபல பாலிவுட் நடிகைகள் பலர் தமிழ் திரையுலகில் பிசியாக நடித்து வரும் நிலையில், மொழி தெரியாமல் சில நடிகைகள் கஷ்டப்படுவது உண்டு. அந்த வகையில் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில்

'பாகுபலி' ரானாவை காதலிக்கும் பெண் தொழிலதிபர் இவர்தான்

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' திரைப்படங்களில் வில்லனாக நடித்திருந்த ராணா டகுபதி கடந்த சில ஆண்டுகளாக பெண் தொழிலதிபர் ஒருவரை

ரஜினியின் 'அண்ணாத்த' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வமாக அறிவித்த சன்பிக்சர்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.