முதன்முறையாக 6,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை: அதிர்ச்சி தகவல் 

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 4000க்கும் அதிகமாக இருந்த நிலையில் நேற்று மட்டும் 6000ஐ நெருங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இன்று முதல்முறையாக தமிழகத்தில் 6000க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் இன்று 6472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1336 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,92,964 என்பதும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90,900 என்பதும் குறிப்ப்பிடத்தக்கது

மேலும் இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 88 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3232 என்பதும குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5210 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,36,793 ஆகும். மேலும் இன்று ஒரே நாளில் 60,375 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 21,57,869 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

இந்தியாவில் தங்கக் கடத்தல் தொடர்ந்து அதிகரிப்பதற்கு காரணம் என்ன தெரியுமா???

சமீபக் காலமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குத் தங்கம் கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பாஜகவில் இணைந்தார் பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்

கடந்த சில மாதங்களாக பாஜகவில் சினிமா பிரபலங்கள் இணைவதும் அவர்களுக்கு பாஜகவில் பொறுப்புகள் அளிக்கப்பட்டு வருவதுமான செய்திகள் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம்.

வனிதா விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சூர்யாதேவிக்கு ஜாமீன்: கஸ்தூரி தகவல்

வனிதா திருமண விவகாரத்தில் அவதூறாக பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டதாகவும் சூர்யா தேவி என்ற பெண் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்

யாருங்க நீங்க? யூடியூப் வனிதாவுக்கு அனுப்பிய மெயில்

வனிதா, சூர்யாதேவி விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த வனிதா, யூடியூபே குழப்பி போய் நிக்குது என்றும், யாருங்க நீங்க

செல்போன் ஆப், விசாவை தொடர்ந்து இப்போ இதுவுமா… கெடுபிடி காட்டும் அமெரிக்கா!!!

அமெரிக்காவின் ஹீஸ்டன் மாகாணத்தில் இருக்கும் சீனத் தூதரகம் முன்பு நேற்று முன்தினம் இரவு சில முக்கிய ஆவணங்கள் எரிக்கப் பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன