கோயம்பேடால் குவிந்த கொரோனா நோயாளிகள்: இன்று 580 பேர்களுக்கு பாதிப்பு

  • IndiaGlitz, [Thursday,May 07 2020]

தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு கடந்த 3 நாட்களாக 500க்கு மேல் இருந்து வரும் நிலையில் இன்றும் ஐநூறுக்கும் மேல் அதாவது 580 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தில் இன்று 580 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,409 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 580 பெயர்களில் 316 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சென்னையில் 2644 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

சென்னையை அடுத்து திருவள்ளூரில் 63 பேர்களும், விழுப்புரத்தில் 45 பேர்களும், பெரம்பலூரில் 33 பேர்களும் அரியலூரில் 24 பேர்களும், கடலூரில் 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று 14,195 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து 2,02,436 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இன்று கொரோனாவால் 31 பேர் குணமாகி உள்ளதாகவும் இதனை அடுத்து 1,547 பேர் கொரோனாவில் இருந்து மொத்தம் குணமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி இன்று கொரோனாவால் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், இதனையடுத்து தமிழகத்தின் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 37 என்பதும் குறிப்பிடத்தக்கது

இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர்புடையவர் என்பது அதிர்ச்சியான தகவல் ஆகும்

More News

மெடிக்கல் கடையில் ஆல்கஹால் விற்குமா? நடிகை ரகுல் ப்ரித்திசிங் கேள்வி

கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் கொரோனா வைரஸ் குறித்த செய்திகளை பின்னுக்கு தள்ளிவிட்டு டாஸ்மார்க் குறித்த செய்திகளுக்கு முன்னுரிமை தரப்பட்டு வருகிறது.

என்று தணியும் கொரோனா!!! எப்போது முடிவுக்கு வரும்??? தொடரும் கேள்விகளுக்கு விளக்கம்!!!

ஒரு பெருந்தொற்றை எப்படி அளக்கலாம் என்பதைப் பற்றிய கணக்கீட்டு வடிவத்தை முதன் முதலில் இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் ஃபார் என்பவர் உருவாக்கினார்.

கடும் உணவுப் பற்றாக்குறையில் தத்தளிக்கும் ஏமன்: 225 மில்லியன் டாலர் நிதி வழங்கும்  அமெரிக்கா!!!

ஏமன் நாட்டில் நிலவும் கடுமையான உணவுப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக அமெரிக்க அரசு, 225 மில்லியன் டாலர் தொகையை அவசர  உதவியாக வழங்க முன்வந்து இருக்கிறது.

'சந்திரமுகி 2' படத்தில் ஜோதிகாவுக்கு இரட்டை வேடமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் ஜோதிகா நடிப்பில் பி வாசுவின் இயக்கத்தில் உருவான 'சந்திரமுகி' திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஊரடங்கு நேரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விஜய்சேதுபதி செய்யும் உதவி!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் ஏற்கனவே 'பண்ணையாரும் பத்மினியும்' 'ரம்மி' மற்றும் 'தர்மதுரை' ஆகிய படங்களில் நடித்துள்ளனர்